Thursday 28 February 2013

DAILY HOLY SLOKAS 01.03.2013 TO 10.03.2013






Sankata hara chathurthi slogam :



கணாதி பஸ்த்வம்  தேவேஸ  சதுர்த்யாம் பூஜிதோ மயா
கஷ்டாந்  மாம்  மோசயேஸாந  சர்வமிஷ்டம்  ச தேஹிமே



Today Swathi star.  Have Narasimma Darshan.

Om Naarasimhaaya Vidhmahe' Vajranakhaaya Dheemahi
Thanno Vishnuh Pracho Dhayaath






Om Aadithyaaya Vidhmahe' Maarthaandaaya Dheemahi
Tannah Suryah prachodayath




Om Gowri naadhaaya Vidhmahe' Sadhaashivaaya Dheemahi
Thanno  Shivah Pracho Dhayaath


http://mahaperiyavaa.wordpress.com/2013/02/14/64000-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-shri-kamaksh/




துன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர்.
           பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கும் பைரவர் என்பது பெயராயிற்று.நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

குழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

இழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லதி நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.

சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

திருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்யது வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.

தீரா நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும். அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள பிணிகள் தீரும்.

செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.

தினந்தோறும் காலையில் " ஓம் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷணபைரவாய நமஹ "என்று ஜெபிப்பது நல்லது ு.

Pls visit :
http://enchadyvairavar.com/index.php/2012-06-20-17-03-45




Om Soma puthraaya Vidhmahe' mahaa pragnaaya Dheemahi
Thanno Budhah Pracho Dhayaath



How to observe Shat thila Ekaadasi?  To know , click the following link :

http://www.speakingtree.in/spiritual-blogs/seekers/god-and-i/shat-tila-ekadashi-06-feb-2013

Vijaya Ekadashi is observed during the Krishna Paksha of Phalgun month as per traditional North Indian calendar. The corresponding period in other regions is Krishna Paksha of Magh month. Vijaya Ekadashi 2013 date is March 8. This Ekadasi is observed as Pankoddhar Ekadasi in Orissa. It is believed that Vijaya Ekadashi fasting was observed by Lord Ram before he crossed to ocean to reach Lanka.




Om MahishamardhinyaiVidhmahe' Durgaa deviyai cha Dheemahi
Thanno Devi Pracho Dhayaath





Shani Pradosh - Sani Pradosham

According to Hindu belief, Lord Shiva swallowed the poison on a Saturday and this is called Sani Pradosh or Shani Pradosha. Sani Pradosham is classified into Uthama Shani Pradhosham, Mathima Sani Pradhosham, and Athama Sani Pradhosham.

Uthama Sani Pradhosha is the Sani Pradhosham that comes during the Tamil month of Chithirai, Vaigasi, Ayppasi and Karthigai during the waxing period. Mathima Sani Pradhosham occurs during the Tamil month of Chithirai, Vaigasi, Ayppasi and Karthigai during waning period. All other Shani Pradhoshams come under this category Athama Shani Pradhosha.

Maha Pradhosham

Maha Pradhosha is a yearly rite which falls during February – March (Magha in Sanskrit, Kumbha Masam in Malayalam, and Maasi in Tamil) before Maha Sivarathri. Pradosham is carried out regularly in all Lord Shiva Temples across the country.

History of Pradosha Vrat or Why Observing Pradosham

According to Hindu Puranas, the gods (Devas) and the demons (Asuras) were stirring the milky ocean to extract amirtam (nectar), with Vasuki (the serpent king) as a rope. As Vasuki underwent severe scratches due to the churning, she emitted a powerful poison which is capable of destroying the world. The helpless celestials pleaded Lord Shiva to save them. In order to save them, Lord Shiva swallowed the poison. Goddess Parvati stopped the poison in Lord’s throat and it is believed that his throat turned to blue. As a result of this, Lord Shiva came to be known as Thiruneelagandan or Neelakandan (the one with Blue Throat).

It is said that on the Trayodhasi (thirteenth moon day) day, the gods and demons realized that they had committed a sin of not praying the God and prayed for forgiveness. Lord Shiva Shankar forgave them and danced in between the horns of the Nandhi’s (Celestial Bull) forehead. This time is called Pradhosham. It is believed that if anybody prays Lord Shiva in that time, he fulfills their wishes and gives them mukthi.






Shivashtakam Lyrics

Prabhum Prananatham Vibhum Vishvanatham
Jagannathanatham Sadanandabhajam
Bhavadbhavya Bhuteshvaram Bhutanatham
Shivam Shankaram Shambhumishanamide 1

Gale Rundamalam Tanau Sarpajalam
Mahakalakalam Ganeshadhipalam
Jatajutabhangottarangairvishalam Shivam
Shankaram Shambhumishanamide 2

Mudamakaram Mandanam Mandayantam
Mahamandala Bhasmabhushhadharamtam
Anadihyaparam Mahamohaharam
Shivam Shankaram Shambhumishanamide 3

Vatadho Nivasam Mahattattahasam
Mahapapanasham Sadasuprakasham
Girisham Ganesham Suresham Mahesham
Shivamshankaram Shambhumishanamide 4

Girindratmajasangrahitardhadeham
Girau Sansthitam Sarvada Sannageham
Parabrahma Brahmadibhirvandhyamanam
Shivam Shankaram Shambhumishanamide 5

Kapalam Trishulam Karabhyam Dadhanam
Padambhojanamraya Kamam Dadanam
Balivardayanam Suranam Pradhanam
Shivam Shankaram Shambhumishanamide 6

Sharachchandragatram Gunananda Patram
Trinetram Pavitram Dhaneshasya Mitram
Aparnakalatram Charitram Vichitram
Shivam Shankaram Shambhumishanamide 7

Haramsarpaharam Chitabhuviharam
Bhavamvedasaram Sadanirvikaram
Smashaanevadantam Manojamdahantam
Shivamshankaram Shambhumishanamide 8

Stavam Yah Prabhate Narah Shulapane
Patheth Stotraratnam Vhaprapyaratnam
Sputram Sudhyanam Sumitram Kalatram
Vichitrai Samaradya Moksham Prayati 9

Prabhum Prananatham Devotional Video Song

http://www.youtube.com/watch?v=b2SatVpb23Q&feature=player_embedded




Visit my blogs:
www.shivsaitours.blogspot.in
www.songsbyshanks.blogspot.in


"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Monday 25 February 2013

DAILY HOLY CHANTS







Om BhuJangesaaya Vidhmahe' Uragesaaya Dheemahi
Thanno Naagah Pracho Dhayaath






Om Sudarshanaaya Vidhmahe' Mahaamantraaya Dheemahi
Thanno Chakrah Pracho Dhayaath


Om paravarasaaya Vidhmahe' guru vyakthaaya Dheemahi
Thanno guru Pracho Dhayaath



 இமயத்தில் புலிக்கொடி ஏற்றிய கரிகாற் சோழன் முதல் அநபாயச் சோழன்வரை முடிசூட்டிக் கொள்ளும் சிறப்புக் கொண்டது கரூர்! அவ்வூரில் மணி மண்டபங்களும், மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் நிறைந்து விளங்கின. அமராவதி என்னும் வற்றாத நதி ஒன்றும் வளம் கொழிக்க ஓடிக்கொண்டிருந்து. அந்நதியின் இருமருங்கிலும் பெருந்தவசிகள் ஆசிரமம் அமைத்து அருந்தவம் செய்து வந்தனர். இந்நகரத்தில் ஆனிலை என்னும் ஓர் ஆலயம் அமைந்திருந்தது. எம்பெருமானுக்கு பசுபதீசுரர் என்றும், ஆனிலையயுடைய மகாதேவர் என்றும் நாமங்கள் உண்டு. இத்தலத்தில் எம்பெருமானைக் காமதேனு வழி பட்டமையால் இப்பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு. ஆனிலைப் பெருமானை வழிபடும் அடியவர்கள் பலருள், எறிபத்தர் என்பவரும் ஒருவர். இவர் சிறந்த சிவ பக்தர். இவரது நெற்றியிலும், திருமேனியிலும், திருவெண்ணீரு எந்நேரமும் ஒளி வீசிக்கொண்டேயிருக்கும். ஜடா முடியிலும், கழுத்திலும், கைகளிலும், மார்பிலும், உருத்திராட்ச மாலைகள் எந்நேரமும் அணிந்திருப்பார். சிவனடியார்களுக்கு எவ்வித துயரமும் நேராவண்ணம் அவர்களைப் பாதுகாத்து வருவதைக் தமது குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அடியார் அதற்காக எந்நேரமும் ஒரு மழுவை ஆயுதமாக வைத்துக் கொண்டிருப்பார். தம்மிடமுள்ள மழுவாயுதத்தினால் அடியார்களுக்கு இடர் செய்யும் பகைவர் மீது எறிந்து, அடியார்கள் துயரத்தைப் போக்குவார். இது காரணம் பற்றியே அவருக்கு எறி பக்தர் என்னும் திருநாமம் ஏற்பட்டது.
காலப்போக்கில் அவரது காரணப் பெயர் வழக்கிலே வேரூன்றி அவருடைய இயற்பெயர் மறைந்து போனது. எறிபத்தர் பக்தியோடு நல்ல வீரத்தையும் பெற்றிருந்தார். அஞ்சா நெஞ்சம் கொண்டவர். கள்வர்க்கும் அஞ்சமாட்டார். நாட்டு மன்னனுக்கும் நடுங்க மாட்டார். அவர் பரமனுக்கும், பரமனது அன்பர்களுக்கும் மட்டும்தான் பயந்து வணங்கித் தலை குனிந்து நிற்பார். அவ்வூரில் இவரைப் போலவே ஆனிலை பெருமானிடம் பேரன்பு பூண்டிருந்த சிவகாமியாண்டார் என்றொரு பக்தர் இருந்தார். இவர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர். வயது முதிர்ந்தவர். முக்கண்ணணுக்கு, முத்துப்பனி தூங்கும் பூக்களால் மாலைகள் தொடுத்துச் சாத்தும் சிறந்த தொண்டினை தமக்கு விவரம் தெரிந்த நாள் முதற்கொண்டு தவறாது செய்து கொண்டிருந்தார். இச் சிவத்தொண்டர் வைகைறயில் எழுவார்; தூய நீராடுவார்; நெற்றியிலும், மேனியிலும் திருவெண்ணீற்றை சிவாகம முறைப்படிப் பூசிக் கொள்வார். வாசனை மிகுந்த மலர்களைக் கொய்து வர நந்தனம் செல்வார். மலர் கொய்யும் பொழுது, பூக்களின் மீது மூச்சுக் காற்று படாமல் இருப்பதற்காக தமது வாயைத் துணியால் கட்டிக் கொள்வார். இவர் பஞ்சாட்சர மந்திரத்தை இடையறாது ஓதிய வண்ணம் மலரும் நிலையிலுள்ள வண்டுகள் தீண்டாத பூக்களை நிறையப் பறித்துக் கூடையில் நிரப்பிக் கொள்வார். எவ்வளவுதான் கூடை நிறையப் பூக்களைப் பறித்து நிரப்பிக் கொண்டபோதும், இவரது ஆசை மட்டும் ஒருபோதும் தணியவே தணியாது. இன்னும் நிரம்பப் பூக்கள் பறிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான் இவரது மனதிலே நிறைந்திருக்கும். இவ்வந்தணர் கையிலே ஒரு கழி வைத்திருப்பார். அக்கழியிலே பூக்கூடையை மாட்டிக் கொண்டு, திருக்கேயிலுக்குப் புறப்படுவார். மலர்களை மாலையாக்கி, மகாதேவனது அரவமணிந்த மேனியில் அழகுறச் சாத்தச் செய்வார். அன்றைய தினம் புரட்டாசித் திங்கள் ! அஷ்டமி திதி பசுபதீசுரருக்குத் திருவிழாவும் கூட ! தனால் நகரமெங்கும் வாழை மரங்களும், கமுகுகளும், தென்னங்குருத்துத் தோரணங்களும் விதவிதமான அலங்காரத்துடன் காட்சியளித்தன. கடைகளும், வேடிக்கைப் பொருட் கூடங்களும் ஏராளமாக இருந்தன. மக்கள் கூட்டம் கடல் போல் வெளியூர்களில் எல்லாமிருந்து வந்து நிறைந்த வண்ணமாகவே இருந்தன. கைலாசமே கருவூருக்கு வந்தது போன்ற எழிற்காட்சி ! அந்த அஷ்டமி திதியன்று - வைகறைப்பபொழுது வழக்கம் போல் சிவகாமியாண்டார் பூக்களைக் கூடையில் நிரப்பிக் கொண்டு மன நிறைவோடு ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். அப்பொழுது அரண்மனைச் சேவகர்கள் அவ்வழியே பட்டத்து யானையை அமராவதி ஆற்றில் நீராட்டி அழைத்து வந்து கொண்டிருந்தனர். திடீரென்று பட்டத்து யானைக்கு எதனாலோ மதம் பிடித்துக் கொண்டது. யானை கட்டுக்கடங்காமல் ஓடத் தொடங்கியது.
திருவிழா பார்க்க வந்த மக்கள் அடித்துப் புடைத்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாக ஓட்டம் பிடித்தனர். யானை மீது இருந்த பாகன் அதனை அடக்க முயன்றான்; முடியவில்லை. யானையுடன் வந்த குத்துக்கோற் காவலர்கள் கூட, யானையை அடக்க முயற்சி செய்து தோல்வியைத்தான் அடைந்தனர். அவர்கள் தப்பித்ததே பெரும் பாடாகிவிட்டது. அப்பொழுது அவ்வழியாக மலர்க் கூடையுடன் சிவகாமியாண்டார் ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். மக்கள் அடித்துப் புடைத்துக் கொண்டு ஓடுவதையும், யானை மதம் பிடித்து ஓடிவருவதையும் கண்டு சிவகாமியாண்டார் பயந்து நடுங்கி, பூக்கூடையுடன் ஓட முயன்றார். அவரால் முடியவில்லை. கூட்டம் கூட்டமாக மக்கள் பலர் ஓடிக்கொண்டேயிருந்தனர். அக்கூட்டத்தாரிடையே இவ்வந்தணர் சிக்கிக் கொண்டார். அவரால் முடிந்தமட்டும் வேகமாக ஓடிப் பார்த்தார். அதற்குள் மதக்களிறு அவரை நெருங்கி விட்டது. அது தனது துதிக்கையால் சிவகாமியாண்டார் தோளில் பிடித்திருந்த பூக்கூடையைக் கழியோடு பற்றி இழுத்து வீதியில் சிதறிவிட்டு அவரை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு ஓடியது. சிவதா! சிவதா! என்று பசுபதிநாதரைத் துதித்தார் அடியார். அவருக்கு கோபம் மேலிட்டது. நிலத்தில் கிடந்த கழியை எடுத்துக்கொண்டு யானையை அடிக்க அதன் பின்னால் ஓடினார். யானை அதற்குள் வெகு தூரம் ஓடிவிட்டது. எம்பெருமானே ஓலம் ! புலித் தோல்தனைப் பொன்னாற் மேனிதனில் போர்த்தவனே ஓலம் !! உமது பொற் பாதங்களில் சாத்திக் களிக்கக் கொண்டு வந்த புத்தம் புது மலர்களை இக்களிறு அநியாயமாக நிலத்தில் கூடையோடு கொட்டிக் கெடுத்து விட்டதே ! இறைவா ! நான் என்செய்வேன் ! மகாதேவா ! சாம்பசிவா ! தயாபரா ! பசுபதீசுரா ! ஆனிலைப் பெருமானே ! ஓலம் !! ஓலம் !! ஐயனே ! இனியும் என் உயிர் தங்குவது முறையல்லவே ! சிவதா ! சிவதா ! ஓலம் ! ஓலம் ! சிவகாமியாண்டார் ஓலமிட்டவாறு சின்னக் குழந்தை போல் அழுது கொண்டேயிருந்தார். இந்த சமயத்தில், அவ்வழியே வந்து கொண்டிருந்தார் எறிபத்தர். அவரது காதுகளில் அந்தணரின் ஓலக்குரல் வீழ்ந்தது. அவர் வேகமாக ஓடிவந்து சிவகாமியாண்டாரை அணுகி, நடந்த விவரத்தைப் பற்றிக் கேட்டார். அந்தணர் நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் விளக்கமாக கூறினார். அந்தணர் மொழிந்ததைக் கேட்டு, சினங்கொண்டு கொதிப்புற்ற எறிபத்தரின் கண்கள் கனலாக மாறின. தோள்மீது இருந்த கோடாரியைக் கையிலே தூக்கிப் பிடித்தார். சிவனடியார்களுக்கு வழி வழியாகப் பகையாக இருப்பது யானை ஒன்றுதான் ! அதனை இப்பொழுதே கொன்று வீழ்த்துகிறேன் என்று சூளுரைத்தார். பட்டத்து யானை சென்ற திசை நோக்கி ஓடினார் ! இவர் சீறி எழுந்த காட்சி பெருங்காற்றும், வெந்தணலும் கலந்து பொங்கி எழுந்தது போல் இருந்தது ! மத யானை ஓடிக்கொண்டிருந்தது. எறிபத்தர் வேகமாக ஓடிச்சென்று யானையின் முன்னால் நின்றார். யானையைக் கொல்ல, சிங்கம் போல் பாய்ந்தார். அவ்வளவுதான் ! யானை, எறிபத்தரை நோக்கி, துதிக்கையைத் தூக்கிய வண்ணம் பாய்ந்தது. எறிபத்தர் கோபாவேசத்துடன், கோடாரியை எடுத்து பலமாக வீசி பூக்கூடையைப் பற்றி இழுத்து துதிக்கையைத் துண்டு பட்டுக் கீழே விழுமாறு செய்தார்.
மதக்களிறு இடி இடிப்பது போல் பயங்கரமாக பிளிறிக்கொண்டு நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. யானைக்கு ஏற்பட்ட நிலை கண்டு யானைப் பாகன் கதிகலங்கிப் போனான். யானையைக் காண அருகே சென்றான். யானை முன்னால் கோடரியும் கையுமாக நிற்கும் எறிபத்தரைக் கண்டான். எறிபத்தருக்குக் கோபம் தணியவில்லை. ருத்ரமூர்த்தி போல் காட்சி அளித்தார். யானையருகே விரைந்து வந்து கொண்டிருந்த யானைப் பாகனையும் குத்துக்கோற்காரனையும் கண்டார். அவர்களைப் பார்த்து, ஆத்திரத்துடன், மதக்களிற்றை அடக்க முடியாமல் தொண்டருக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த உங்களை சும்மா விடுவதா ? ஆணவக்காரர்களே ! யானையைவிடக் கேவலமானவர்களே ! உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் ! என்று கனல் தெறிக்கப் பேசினார். கோடாரியால் ஐவரையும் வெட்டிக் வீழ்த்தினார். இந்த இடத்தில் நடந்த நிகழ்ச்சி அனைத்தையும் மன்னர்க்கு அறிவிக்கப் பலர் ஓடினர் ! பட்டத்து யானை வெட்டுண்டதையும், அதைத் தொடர்ந்து ஐவர் கொல்லப்பட்டதையும் மன்னர்க்கு அறிவித்தனர். இச்செய்தியைக் கேட்டு மன்னர் புகழ்ச்சோழர் மனம் பதறிப் போனார். அவரது கோபம் எல்லை மீறியது. அக்கணமே மன்னர் எறிபத்தரைப் பழிவாங்கப் புறப்பட்டார். அவர் பின்னால் படையும் மடை திறந்த வெள்ளம் போல் திரண்டது. அணி, தேர், புரவி, ஆட்பெரும் படைகள் சங்கு, காளம், பேரிகை முதலான் போர் சின்னங்கள் ஒலி எழுப்ப, அணிவகுத்து புறப்பட்டன. வீரர்கள் வேல், வாள், சக்கரம், மழு, சூலம் முதலிய ஆயுதங்களுடன் ஆர்ப்பரித்து எழுந்தனர். மன்னர் புரவியில் வேகமாக கொலைக்களத்திற்கு வந்தார் ! படையைச் சற்று தொலைவில் நிறுத்தி வைத்துவிட்டுப் பட்டத்து யானை இறந்து கிடக்கும் இடத்திற்கு புரவியில் அமர்ந்து சென்றார். பட்டத்து யானையும் குத்துகோற்காரனும், யானைப்பாகனும் கொலையுண்டு கிடப்பது கண்டு மனம் கலங்கிய மன்னர், அவர்கள் பக்கத்தில் கோடாரியும் கையுமாக கோபத்தோடு நின்று கொண்டிருக்கும் எறிபத்தரையும் பார்த்தார். நெற்றியிலே திருநீறு ! மேனியிலே திருநீறு! தலையிலே, கையிலே, கழுத்திலே உருத்திராட்ச மாலைகள். இப்படியாக சிவக்கோலத்துடன் நின்று கொண்டிருக்கும் எறிபத்தரைப் பார்த்தும் மன்னருக்கு எதுவுமே சரியாக விளங்கவில்லை. மன்னர் அவரைத் திருத்தொண்டராக எண்ணினாரே தவிர, கொலைகாரராக மட்டும் எண்ணவே இல்லை ! அரசர் அங்கு கூடியிருந்த மக்களிடம் இக்கொலை களைச் செய்தது யார் ? என்று கேட்டார். அனைவரும் எறிபத்தரைச் சுட்டிக்காட்டி வேந்தே ! இவர்தான் இக்கொலைகளைச் செய்தவர் என்றனர். வீரக்கனல் அணிந்து வெண்புரவி மீது அமர்ந்திருந்த புகழ்ச்சோழர் வியப்பு மேலிட, எறிபத்தரைப் பார்த்தார். வீரமும் கோபமும் நிறைந்திருக்கும் அவ்வடியாரது கருணை முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்த மன்னருக்கு, இத்தகைய கொலைகளைச் செய்யும் அளவிற்கு இத்தொண்டருக்குக் கோபம் வரவேண்டுமாயின் பட்டத்து யானை எவ்வளவு பெரும் தவறு செய்ததோ! இல்லாவிடில் இத்திருத்தொண்டர் எதற்காக இச்செய்களைச் செய்யப் போகிறார் ? என்பதனை ஊகித்துணர்ந்தார்.
அரசர் குதிரையை விட்டுக் கீழே இறங்கினார். எறிபத்தர் முன்னால் சென்று அவரை வணங்கினார். சுவாமி ! இங்கு நடந்தவற்றைப் பற்றி அடியேன் எதுவும் சரியாக அறிந்திலேன். உங்கள் முகத்தைப் பார்த்ததும்தான் உண்மை புரிகிறது : தங்கள் திருவுள்ளம் வருந்தும்படியான செயல் ஒன்று இங்கு நடந்துள்ளது என்று, ஐயனே ! நடந்த தவற்றுக்குப் பாகனையும், யானையையும் தண்டித்தது போதுமா? அருள்கூர்ந்து உத்தரவிடுங்கள் என்று பணிவுடன் கேட்டார். மன்ன! மதக்களிற்றையும், பாகனையும், குத்துக்கோற்காரனையும் கொன்றேன். அதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா ? பட்டத்து யானை இறைவனுக்குப் பூச்சுமந்து சென்ற சிவகாமியாண்டார் என்னும் அந்தணரின் கையிலிருந்த மலர்க்கூடையைப் பிடித்து இழுத்து நிலத்தில் கொட்டி நாசப்படுத்தியது. இத்தகைய தகாத செயலைப் பட்டத்து யானை செய்வதற்குக் காரணமாக இருந்த மற்றவர்களையும் கொன்றேன் ! எறிபத்தர் சொன்னதைக் கேட்டு மன்னர் மேலும் வருந்தினார். பக்தியோடும், பயத்தோடும் மீண்டும் அந்த அடியாரை வணங்கினார். மன்னர் மனதில் தம் மீது ஏதோ ஒரு பெரும் பழி வீழ்ந்துவிட்டது போன்ற பெரும் சுமை ஏற்பட்டது. அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பட்டத்து யானை என்னுடையது. அது செய்த தவற்றிற்கு நான்தான் காரணம். தங்களைப் போன்ற சிவனருட் தொண்டர்களுக்குத் தாங்க முடியாத அளவிற்குக் கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்துமாறு நடந்து கொண்ட நான் இனியும், இந்நில உலகில் இருந்து என்ன பயன் ? நானும் தங்களால் தண்டிக்கப்பட வேண்டியவன்தான். ஐயன் தயவு செய்து என்னையும் இவ்வாளால் தண்டியுங்கள் என்று கூறிய அரசர் தம்மிடமுள்ள உடைவாளைக் கழற்றி அடியாரிடம் நீட்டினார். மன்னரின் ஈடு இணையற்ற உத்தமமான அன்பிற்கு முன்னால் தம் பக்தி எம்மாத்திரம் என்று எண்ணி, நிலை தடுமாறிய எறிபத்தர். சட்டென்று உடைவாளை மன்னரிடம் இருந்து எடுத்துக் கொண்டார். எறிபத்தர், தன்னையும் கொலை செய்வதற்காக வேண்டிதான் உடைவாளைப் பெற்றுக் கொண்டார் ! என்று தமக்குள் ஒரு முடிவிற்கு வந்த மன்னர், எறிபத்தரைப் பார்த்து, ஐயனே! நான் செய்த பிழை என்னை விட்டு நீங்கியது என்று கூறித் தலைவணங்கி நின்றார். மன்னரின் ஒவ்வொரு செயலையும் பார்த்து மனம் பதறிப்போனார் எறிபத்தர். அவரை தசை எல்லாம் ஒடுங்க, செய்வது யாது ? என்று கலங்கி நின்றார். அவரது உள்ளத்தில் இனம் தெரியாத ஒருவித உணர்ச்சி வெள்ளப் பிரவாகம் போல் ஓடியது ! ஐயையோ! எவ்வளவு தவறான செய்களைச் செய்துவிட்டோம். சமன் செய்து சீர் தூக்குவது போல், நேர்மை குன்றாது ஆட்சி புரியும் மன்னனின் மாண்பினை உணராது போனேனே! உயர்ந்த பண்பும், பக்தியும் கொண்டுள்ள தொண்டருக்குத் துரோகம் செய்து விட்டேனே!
திருவெண்ணீற்றுக்குத் தம் உயிரையே இழக்கத் துணிந்த இந்த பக்தனுக்கா எனது பாதகம் ! இஃது அடுக்கவே அடுக்காது. இவர் அரசர் அல்ல, அடியார்களின் அன்பர். இவரது பட்டத்து யானையையும் மற்றவர்களையும் கொலை செய்தேனே ! கொற்றவனாக இருந்தும் எனது கொலை பாதகத்திற்குச் சற்றும் தண்டனை கொடுக்க எண்ணாது தம்மையும் அல்லவா மாய்த்துக் கொள்ளப் பார்க்கிறார். இவர் அருள் வடிவமானவர் ! அன்பின் திருவுருவமானவர் ! அகிலமே பேற்றுதற்குரிய திரு அவதாரச் செம்மல் ! அரனாருக்கும், அவரது அடியார்களுக்கும் உண்மையிலேயே துரோகம் செய்தவன் நானேதான் ! நான் உலகில் வாழவே கூடாது. மடியவேண்டியவன். இவ்வாறெல்லாம் தமக்குள் எண்ணிப் புண்பட்ட எறிபத்தர், கையிலிருந்த உடைவாளால் தம் கழுத்திலே வைத்து அறுத்துக் கொள்ளப் போனார். எறிபத்தரின் செயல் கண்டு திடுக்கிட்டுப் போன மன்னவர் கற்றறிந்த அறிவுச் செம்மலே ! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள் ? இது கொடுமை, கொடுமை என்று கூறியவாறே, அவரது கையிலிருந்த உடைவாளை பற்றிக் கொண்டார். அவ்வமயம் அனைவரும் வியக்குமாறு விண்ணிலே பொன்னொளி பிறந்தது. எம்பெருமானின் திருவருளினால் அசரீரி வாக்கு மண்ணில் இருந்தோர் கேட்கும் வண்ணம் எழுந்தது. அன்பிற் சிறந்தவர்களே ! உங்களுடைய தொண்டின் பெருமையை உலகெல்லாம் அறிந்துகொள்ளும் பொருட்டே இன்றைக்கு இவை அனைத்தும் நடந்தன. இறைவனின் தெய்வ வாக்கைக் கேட்டு எறிபத்த நாயனாரும், மன்னரும் இறைவனைத் தியானித்தபடியே நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். இறைவனின் திருவருளால் இறந்த உயிர்கள் அனைத்தும் உயிர் பெற்றன. அதுபோலவே சிவகாமியாண்டார், பூக்கூடையிலும் பூக்கள் தானாகவே நிறைந்திருந்தன. சிவகாமியாண்டார் எம்பெருமானின் திருவருளை நினைத்து மகிழ்ந்தவாறே, ஆனிலை அப்பரை வழிபடப் புறப்பட்டார். இந்நிகழ்ச்சி மன்னரையும், எறிபத்த நாயனாரையும் நண்பர்களாக்கியது. எறிபத்தர் வாள் களைந்து, சோழமன்னரின் தாள் பணிந்தார். சோழரும் அவரது அடி வீழ்ந்து வணங்கினார். சோழமன்னர், பட்டத்து யானை மீதேறி அரண்மனைக்குப் புறப்பட்டார். எறிபத்த நாயனார், நிலவுலகில் நெடுங்காலம் வாழ்ந்து திருத்தொண்டுகள் பல புரிந்தார். இறுதியில் எம்பெருமானுடைய சிவகணத் தலைவராகிப் பேரின்ப வீட்டில் வாழ்ந்தார். அதுபோலவே புகழ்ச் சோழனும் சிறப்புடன் ஆட்சி புரிந்து பேரின்ப வீடு கண்டான். சிவகாமியாண்டாரும் பரமனுக்குத் திருத்துழாய்க் கைங்கரியம் செய்து பூவுலகில் பல்லாண்டு காலம் வாழ்ந்து பிறவாப் பெருவாழ்வு பெற்றார்.
குருபூஜை: எறிபத்த நாயனாரின் குருபூஜை மாசி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
வேல்நம்பி எறிபத்தர் அடியார்க்கும் அடியேன்
vanperuN^   kaLiRu   pAkar madiyavum  udaivALaith  than^dhu  
  enperum  pizaiyi  nAlEennaiyuN^ kollum ennum 
  anpanAr thamakkuth thIN^ku n^inain^dhanan enRu koNdu 
  munpena dhuyirche kuththu mudippadhE mudiven ReNNi





"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Wednesday 20 February 2013

கஷ்டங்கள் நீக்கும் சென்னையின் அஷ்ட லிங்கங்கள்


கஷ்டங்கள் நீக்கும் சென்னையின் அஷ்ட லிங்கங்கள்

கஷ்டங்கள் நீக்கி, செல்வப் பேறு அருளும் சென்னையில் அஷ்ட லிங்கங்கள்

கர்மபூமி எனப்படுகிற இந்திய மண்ணில் சிவம் பெருக்கும் அருட் சின்னங்களாக வானளாவிய கோபுரங்களும், சிவலிங்கத் திருமேனிகளும் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. சில வகை லிங்கங்கள் நம் கண்களுக்குப் புலப்படுகின்றன. சிவ லிங்கத்திருமேனிகள் நம் கண்களுக்குத் தெரியாமலேயே போய் விடுவதும், சில காலங்களில் வெளிவருவதுமாக உள்ளன.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார தன்மை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே!-

என்ற கருத்தை உணர்ந்த அரசர் பெருமக்களும் அங்கங்கே சிவாலயங்களைக் கட்டி வைத்து ஆறுகால வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்து வைத்தனர். சிவலிங்கத்தைக் கண்ணால் காண்பவர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை ஒன்றாக தரிசித்த பலனை அடை வார்கள் என்று வேதாகமம் சொல்கிறது.

தோஷங்கள், துர்பலன்கள் கெட்ட காலங்களை அகற்றி விடுகிற சக்தி ஒரு சிவ லிங்கத்திற்கு உண்டு. வீட்டில் லிங்கம் வைத்து பூஜை செய்வதால் மங்களகரமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். சுத்தமான ஸ்படிக லிங்கம் எந்த வீட்டில் பூஜை செய்யப்படுகிறதோ அந்த வீட்டில் நல்ல நிகழ்வுகளே நடக்கும் என்பது ஆகமவிதி.

சிவலிங்கத்தின் பெருமைகள் பல விதங்களில் பேசப்பட்டாலும் நம் கண்களுக்குத் தெரியாத எட்டு வகைச் சிவலிங்கங்கள், சென்னையின் தென்பாகமான  திருவேற்காட்டின் மையப்பகுதியில் எட்டு திக்கு லிங்கங்களாகக் காட்சி தருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியில் காவி உடை அணிந்தவாறு காலை தொடங்கி மாலை நேரத்திற்குள் திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மலை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்னிக்கோடு, திருநட்டாலம் ஆகிய சிவத்திருத்தலங்களை ஓடி ஓடியே தரிசித்து அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபித்து மத நல்லிணக்கத்திற்கு வித்திட்டு வருகின்றனர்.

அதே போல் வேதங்களே வேல மரங்களாய் நிற்கும் வேற்காட்டுத் திருத்தலத்தினை மையமாக வைத்து சிவாலயத் திருவலம் ஆண்டு தோறும் நடைபெற்றுக் கொண்டிருப்பது இதுவரை யாருக்கும் தெரியாத ஆன்மீகத் தகவலாக இருக்கிறது.

மணக்கோல சிவனைச் சுற்றி மகாலிங்கங்கள்:-.

குறுமுனிவர் அகத்தியர் ஒரு முறை வேற்காட்டு ஈஸ்வரனை வழிபட வந்தபோது ஈஸ்வரா! எல்லா திருத்தலங்களுக்கும் சென்று தங்கள் திருமேனியை லிங்கவடிவில் மட்டுமே காண்கிறேன். இங்கே என் மனம் நிறையும்படி மங்கள நாயகனாய் மணக்கோலத்தில் தரிசனம் செய்ய அருளக் கூடாதா? என்று கேட்க ஈசனும் மகிழ்ந்து  பார்வதி தேவியுடன் திருமணக் கோலத்தில் காட்சி தந்து அகத்தியரை மனம் மகிழ வைத்தார்.

இதைக் கண்ட பார்வதி தேவி, சுவாமி, தபஸ்விகள் முனிவர்கள் கேட்ட உடனே மங்கள நாயகனாகக் காட்சி தந்து விடும் தாங்கள் சாதாரண மனித ஜீவன்களுக்கு மட்டும் உடனே காட்சி தராமல் காலம் தாழ்த்துகிறீர்களே. இது என்ன தர்மம்ப என்று கேட்டார்,  உடனே சிவன் தனக்கே உரிய பாணியில் எக்காளச் சிரிப்பை வெளிக்காட்டி விட்டு, தேவி! உனக்கு அஷ்டதிக்குகளிலும் எண்வகை லிங்கத் திருமேனிகளாக யாம் அருட்காட்சி தருவோம் என்று சொல்லி தன் மேனியிலிருந்து எண்வகை லிங்கங்களாகப் பிரிந்து அமர்ந்தார்.

உனக்கு இப்போது திருப்திதானே! என்று கேட்க, உங்கள் கருணை எனக்குத் தெரியாதா! என்று தோளில் சாய்ந்திட இது அருட்பீடம்! அந்தப்புரம் அல்ல! என ஈசன் விலகிட தேவர்கள் சக முனிவர்கள் பூமாரி பெய்தனர்.

அநபாயச் சோழன் அரும்பணி:-

தொண்டை மண்டலத்தை நீதி நெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்த மன்னர்களுள் அநபாயன் என்ற இரண்டாம் குலோத்துங்க சோழனும் ஒருவன். கி.பி. 12-ம் நூற்றாண்டில் சென்னை குன்றத்தூரில் அவதரித்து, 63 நாயன்மார்களது திரு அவதார வரலாற்றைத் திருத் தொண்டர் புராணமாக எழுதிட சேக்கீழாரை பட்டத்து யானை மேல் அமர வைத்துக் கவரி வீசி வந்ததோடு அவரைத் முதல்-அமைச்சராகவும் ஆக்கிக் கவுரவித்தான்.

அதன் பிறகு தெய்வச் சேக்கிழாருடன் நின்று தொண்டை மண்டல சிவாலயங்களில் அரும்பணி செய்தான். இச்செயலை நினைவு கூறும் வகையில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலுக:குப் பின்புறம் லிங்கோத்பவருக்கு நேராக இன்றும் அழியாத சின்னமாக அநபாயனையும், சேக்கிழாரையும் தெய்வத்துள் தெய்வமாக வைத்துள்ளனர்.

இத்திருத்தலத்தில்தான் 63 நாயன்மார்களுள் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்தார். சிவபூஜை செய்தும் அன்னதானம் செய்தும் சொத்துக்களை இழந்தவர் சூதாடி பொருளீட்டி அன்னமிட்டார். ஆட்டத்தில் தவறிழைத்தவர்களை உடைவாளால் வெட்டினார் சிவப்பணியை மூர்க்கராயினும் செய்ததால் அவர் அருட்பணியைச் சேக்கிழார் பெருமான் மூர்க்கருக்கும் அடியேன் என்று பாடினார்.

காண்பவரது கண்கள் குளிரவும், எண்ணுவோர் செயல் வெல்லவும், வாழ்வில் நிம்மதி கிடைத்திடவும் அஷ்ட லிங்கங்கள் தரிசனததை பவுர்ணமி. அமாவாசை திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஒரே தினத்தில் தரிசனம் செய்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறுவோம். எண் திசை லிங்கத்திருமேனிகளும், அஷ்ட ஐஸ்வர்யங்களாக எண் திசைக்காவலர்களாக, அஷ்டதிக் கஜங்களாக, அஷ்டமாசித்திகளையும் அருளிட, வள்ளிக் கொல்லைமேடு தொடங்கி சின்னக் கோலடி வரை காத்திருக்கின்றன.

1.விருப்பம் பூர்த்தியாக்கும் இந்திரலிங்கம்-

வேத புரிஸ்வரர் ஆலயத்திலிருந்து நேர் கிழக்காக இந்திரன் பூஜை செய்த இந்த ஈஸ்வரன் அமைந்திருக்கும், இடம்தான் வள்ளிக் கொல்லைமேடு. இந்திர சேனாபதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். பதவி உயர்வு, அரசாங்க நன்மை ஆகிய பலன்களை அருள்பவராக விளங்குகிறார். சுவாமி முன் நெய்தீபம் ஏற்றி வைத்து கீழ் கண்ட பாடலை பாடினால் நினைத்தவை நடக்கும்.
தூயகண் மூன்றினோடு சுடரும் பொன்வதனம் நான்கும்
பாலிமான் மழுவினோடு பகர்வர தாபயம் கண்
மேயதின் புயங்கள் நான்கும் மிளிருமின் அணைய தேகம்
ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை அதனிற்காக்க

2. துயரங்களை விரட்டும் அக்னிலிங்கம்-

குறுமுனிவர் அகத்தியரால் பூஜை செய்யப்பட்ட இந்த ஈஸ்வரன்  நூம்பல் என்ற திருத்தலத்தில் அமர்ந்து அருள் வழங்கி வருகிறார். எதிரித் தொல்லை, வழக்கு இடர்களை நீக்கி ஆனந்தம் தருபவராக விளங்குகிறார். நெய்தீபம் ஏற்றி வைத்து இறைவன் முன் பாட வேண்டிய துதி

பங்கயத் தலிசின் மேவி இருந்துடற் பற்று நீக்கி
அங்கு நற்பூத சித்தி அடைவுடன் செய்த பின்னர்

கங்கையைத் தரித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற் கொங்கை வெற்பனைய பச்சைக் கொடியொடும் உளத்தில் வைத்தே.

3. தர்மம் காக்கும் எமலிங்கம்:-

மரகதாம்பிகை என்ற தேவியுடன் கைலாச நாதர் என்னும் திருநாமத்தில் பூவிருந்தவல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் வலது புறமாக சென்னீர்குப்பம் என்ற தலத்தில் எழுந்தருளி உள்ளார். தர்ம வடிவினராய்த் தோஷங்கள் நீக்கி ஏற்றம் தரகாத்திருக்கிறார். முற்றிலும் கருங்கல்லால் ஆகிய இந்த திருத்தலத்தில் வழிபட்டால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்தாட்டமச்சனி விலகும் இரும்பு தொடர்பான தொழிலில் உயர்நிலை அடையலாம்.

இவர் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி மான் மழுசூலம் தோட்டி வனைதரும் அக்கமாலை கூன் மலி அங்குசம் தீத்தமருகம் கொண்ட செங்கை நான்முக முக்கண் நீல நள்ளிருள் வருணம் கொண்டே ஆன் வரும் அகோர மூர்த்தி தென்திசை அதனிற்காக்க என்று துதிக்க வேண்டும்.

4. நிர்கதியாரை நிமிர்த்தும் நிருதிலிங்கம்:-

தேவி பாலாம்பிகை உடனுறையும் பாலீஸ்வர சுவாமி என்ற திருநாமத்துடன், வேற்காட்டீசருக்குத் தென் மேற்குத் திசையில் பாரிவாக்கம் என்ற தலத்தில் எழுந்தருளி உள்ளார். இன்றைக்குச் சுமார் 2320 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த லிங்கம் ஸ்தாபனம் செய்யப்பட்டதாகத் தலவரலாற்றுக் குறிப்பு உள்ளது.

ஆவடி-பூந்தமல்லி சாலைஅமைந்துள்ள இந்த திருத்தலத்தில் தீராத துயரத்தில் சிக்கி நிர்கதியாய் நிற்பவர்கள் நெய்தீபம் ஏற்றி வலம் வந்தால் கொடுத்த கடன் திரும்பி வரும்  உறவினர் அனுகூலம் ஏற்படும். கீழ்காணும் பாடலை பாடி ஈசனை துதிப்பது நல்லது.

வளமறை பயிலு நாவன் நா மணி கண்டன்
களம் அடு பினாகபாணி கையினை தருமவாகு
கிளர்புயன் தக்கன்யாகம் கெடுத்தவன் மார்புதூய
ஒளிதரு மேருவல்லி உதரம் மன்மதனைக் காய்ந்தோன். 

5. நல்ல நேரத்தை தரும் வருண லிங்கம்:-

அருள் நிறை தேவியான ஜலகண்டீஸ்வரி உடனுறையும் ஸ்ரீ ஜலகண்டேஸ்வர சுவாமி என்ற திருநாமத்தில்  பாளையம் என்ற புண்ணிய பூமியில் வெட்ட வெளிச்சிவனாக அருள்தருகிறார். பெரிய கொடிய நோய்கள் தீர, குழந்தைப் பேறு அடைய நெய் தீபம் ஏற்றி கீழ்காணும் பாடலை பாட வேண்டும்.
திவண் மறி அக்கமாலை செங்கையோர் இரண்டும் திங்க
அவிர் தரும் இரண்டு செங்கை வரதம் தோள் அபயம் தாங்க
களிநிறை வதனம் நான்கும் கண்ணொரு மூன்றும் காட்டும்
கவனமா மேனிச் சத்தியோ சாதன் மேற்றிசையில் காக்க.

6. வாழ வைக்கும் வாயு லிங்கம்:-

வேற்காட்டவர் தலத்திலிருந்து வடமேற்கு திசையில் விருத் தாம்பிகை சக்தியோடு வாழவந்த வாயு லிங்கேஸ்வரராக அருள் தருகிறார். ஆலயத்தின் அருகே இலவம்பஞ்சு மரங்கன் இருக்க அதிலிருந்து வெடித்துச் சிதறும் பஞ்சுகள் சிவலிங்கத்தின் மேல் படுவதால் பருத்திப்பட்டு என்ற திருப்பெயர் இத்தலத்திற்கு வந்தது. ஆவடி சாலையில் அமைந்துள்ள இந்த ஈசனின் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வணங்கினால். சூன்யங்கள் விலகும் இழந்த பொருள், சொத்துக்களை திரும்ப பெறலாம். காற்றில் படரும் நோய்கள் தீரும்.

கடையகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள் தீயால்
அடலை செய்து அமலை தானம் அறை தர நடிக்கும் ஈசன்
இடைநெறி வளை தாபத்தில் எறிதரு சூறைக்காற்றில்
தடைபடா தெம்மை இந்தத் தடங்கல் உலகிற்காக்க.

7.  செல்வம் தரும் குபேர லிங்கம்:-

சக்தி தேவியார் வேம்பு நாயகி என்ற திருநாமத்துடன்  குபேரபுரீஸ்வர லிங்கராக, ஆவடி-திருவேற்காடு சாலையில் வடதிசைச் சிவனாக அருள் தருகிறார். மூன்று நிலை ஏகதன விமானக் கருவறையுடன், வாயுதேவர், துர்கை, கால பைரவர் சத்ய நாராயணர், நவநாயகருடன் காட்சி தருகிறார்.

சுந்தரன் என்ற சோழ மன்னன் அழகாக ஆட்சி புரிந்தமையால் சுந்தரா சோழ புரமாக ஆயிற்று என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. செல்வப்பேறு அடைய சொத்து வில்லங்கம் அகல சுவாமி முன் நெய் தீபம் ஏற்றி துதிபாடி வழிபட வேண்டும்.

கறை கெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்
அறை தரு தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்தி
பொறை கொள் நான் முகத்து முக்கன் பொன்னிற மேனியோடும்
மறை புகழ் வாம தேவன் வடதிசை அதனிற் காக்க.

8. காரிய தடை நீக்கும் ஈசான லிங்கம்:-

வேதபுரீஸ்வரர் கோயில் கொண்ட திருவேற்காடு தலத்திலிருந்து வடகிழக்கு திசையில் கோலடி சாலையில் சின்னக்கோலடி என்ற இடத்தில் வெட்டவெளி ஆகாச சிவலிங்க மூர்த்தியாக ஞானேஸ்வரி உடனுறை ஈசானாக லிங்கர் அருள் தருகிறார். இங்கே லிங்கம் மட்டுமே உள்ளது. ஒரு காரியத்தில் வெற்றி பெற விரும்பும் மன்னர்கள் இந்த இடத்தில் தான் காரியத்தைத் தொடங்கினார்கள் என்று கால வரலாறு கூறுகிறது.

இந்த ஈசனை வழிபட்டால் காரியத்தடை, கண் திருஷ்டி, வீடுகட்ட தடை, வண்டி வாகனங்களில் லாபம் இல்லாமை ஆகியவை விலகி நலம் பெறலாம்  இறைவன் முன் நெய்யும் நல்லெண்ணெயும் கலந்த தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லா நன்மையையும் கிடைக்கும்.

அங்குசம் கபாலம் சூலம் அணிவர தாபயங்கள்
சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித்
திங்களிற் றவன மேனித் திருமுகம் ஐந்தும் பெற்ற
எங்கள் ஈசான தேவன் இருவிசும் பொங்கும் காக்க
திருமுறைப் பதிகங்கள் சிவவழிபாட்டுத்துதிகளை சில லிங்க மூர்த்தி ஆலயங்களில் வழங்குகிறார்கள்.

 
 


"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

--- On Wed, 20/2/13, k kumar sivachriar <sakthikoil@yahoo.com> wrote:

From: k kumar sivachriar <sakthikoil@yahoo.com>
Subject: Fw: Thondaimandalathil Asta Lingangal (Enkailaya dharisanam in chennai)
To: "madambakkamshanks@yahoo.com" <madambakkamshanks@yahoo.com>
Date: Wednesday, 20 February, 2013, 6:58 PM




Subject: Thondaimandalathil Asta Lingangal (Enkailaya dharisanam in chennai)

              En kailaya Dharshan in Chennai...
        Asta Linga Dharsana   Seva...!
         Om Namah shivaya...!
         In chennai area there is a lot of Historical temples and monuments. but some temples and Devostanams
are only popularised and find by the people. In one of the chennai area,past thondai mandalam, today called as
thiruvallur Dist thers is powerful 8 linga roopams are came to be popularised. Devotees are Doing astalinga
Dharsan within one day.
Important of Vedapureswara Shivan:
      A lot of the velam trees  situated place is called as verkadu as Thiruverkadu. Here the Veda liking  Shiva is
 worshipped by Agathiyar who is the saint of tamil vedham. He asked lord shiva, please show his wedding roopam,
kalyana kolam. sudenly lord shiva give his wedding ropam @ the moment.Then the sakthi parvathi asked her
husband lord shiva, why you did not show his different to all the Devotees who prayed always lord shiva... Shiva.?
 then he told, for agathiya i show my one Seen, but for devotees i show Diffrent linga Roopam with eight Samuthrika
 Lakshana @ eight Disas. around the thiruverkadu  Shivan Stala.
IIndira Lingam-It is situated  at Valli kollai medu a east part of vedapureswar temple..Devotees who need govet support,
promotion in life and jobs  may fire the holy deepam and pray its suitabl slogas at the time of prayer.
Agni Lingam:This lingam is situated at Noombal Village a south east part of vedapureswara.Devotees who need prevention
 of enemy, endless court case.
Ema Lingam:This lingam is situated at senneerkuppam village a south part of vedapureswara. devotees who need sani dasa
 distrbance, iron related business development can pray with gee deepam pooja.
Niruthi Linagm:This lingam is situated at Parivakkam south west part of vedapuriswara.It is having a record news as old as2320 years.
Devotees who needloan , credit return, relatives advantages and good relationship can fire the Gee deep at sannathi.
varuna Lingam:This lingam is situated at Mettupalayam a west part of Vedha pureswara.people who need agriculture development
,long term deseases cure,child birth for couple.ca fire the deepam at the sannathi.
Vayu lingam:This lingam  is situated at Paruthipattu anorth west part of lord vedapureswara. people who need reback your lost things
Devil distrubance cure and air deseaes cure etc.fire the spl deep at sivan sannathi.
Kuber lingam:This lingam is situated at sundara cholapuram a north part of lord vedeapureswara.Devotees who need wealth,
kuber sampathu can fire doop at the sannathi.once upon a time of  king sundara chola ruled this region, hence this place is
 called sundara+chola+ puram.
Easana Lingam:This Lingam is situated atchinna koladi a north east part of thiruverkadu Vedapureswara temple. people who need
 house built, good work Break,vehicle profit can fire the Gee+oil Deep and ask the slogas. for 8 lingas Dharsan having a special
 Slogas for our prayers also available at all eight Temples. Om namah shivaya.
     For this8 linga dharsna takes three hours from the starting place.Om namah Shivaya.
We Do asta Linga Dharsanam..!                        Live with  Iswaryam ...!
sent by:k.kumara sivachariar,sree gathyayani amman koil, thiruneermalai road,
 kuntrathur, chennai.69.Ph: 9176539026

Sunday 17 February 2013

Daily Holy Slokas 18th Feb to 24th Feb. 2013



ஆதிசங்கரர் அருளிய த்வாதச லிங்க ஸ்தோத்திரம்
ஸௌராஷ்ட்ர தேசே வஸுதாவகாரே
ஜ்யோதிர்மயம் சந்த்ர கலாவதம்ஸம்
பக்திப்ராதாய க்ருதாவதாரம்
தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே


மிகவும் புண்ணியம் வாய்ந்ததான ஸௌராஷ்ட்ர தேசத்தில், ஒளிரும் பிறைமதியை சிரசில் தாங்கிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக அவதரித்த சோமநாதரை நான் சரணமடைகிறேன்.

ஸ்ரீசைலச்ருங்கே விவிதப்ரஸங்கே
சேஷாத்ரி ச்ருங்கேபி ஸதாவஸந்தம்
தமர்ஜுதம் மல்லிகா பூர்வதம்
நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும்


பல நல்ல அம்சங்கள் கைவரப்பெற்ற ஸ்ரீ சைலமலையின் உச்சியிலும் சேஷாத்ரி மலையுச்சியிலும் எப்போதும் வாசம் செய்பவரும் இறப்பு, பிறப்பு எனும் இரு நிகழ்வுகளுடன் கூடிய சம்சாரம் எனும் கடலில் தத்தளிக்கும் பக்தர்களுக்கு கரையாக உள்ளவருமான மல்லிகார்ஜுனரை நமஸ்கரிக்கிறேன்.

அவந்திகாயாம் விஹிதாமதாரம்
முக்திப்ரதாய ச ஸஜ்ஜநாநாம்
அகாலம்ருத்யோ பரிரக்ஷணார்த்தம்
வந்தே மஹாகாலமஹம் ஸுரேஸம்


அவந்தி என்னும் முக்தியை அளிக்கக் கூடியதும் அகால மரணத்திலிருந்து காப்பாற்றக்கூடியதும் ஆகிய உஜ்ஜயினியில் ஆட்சிபுரிபவரும் தேவர்களின் தலைவருமான மகாகாளேஸ்வரரை மனதாலும் வாக்காலும் வணங்குகிறேன்.

காவேரிகா நர்மதாயோ பவித்ரே
ஸமாகமே ஸஜ்ஜநதாரணாய
ஸதைவ மாந்தாத்ருபுரே வஸந்தம்
ஓங்காரமீசம் சிவமேக பீடே

காவேரி (நர்மதையுடன் சேரும் ஒரு ஆறு. தென்னிந்திய காவேரி வேறு), நர்மதை ஆகிய நதிகள் சங்கமிக்கும் தூய்மையான மாந்தாத்ருபுரம் என்னுமிடத்தில் உறைபவரும் பக்தர்களைக் கரையேற்றுபவருமான ஓங்காரேஸ்வரரின் பாதங்களைத் தொழுகிறேன்.

பூர்வாத்தரே பாரவிகாபிதா நே
ஸதாசிவம் தன் கிரிஜாஸமேதம்
ஸுராஸுராராதித பாத பத்மம்
ஸ்ரீவைத்ய நாதம் ஸததம் நமாமி


வடகிழக்கில் பாரவி என்னும் தலத்தில் மலைமகளோடு கூடிய சதாசிவனாக, தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்பட்ட அழகிய பாதத் தாமரைகளைக் கொண்ட ஸ்ரீ வைத்யநாதரை நமஸ்காரம் செய்கிறேன்.

ஆமர்த ஸம்ஜ்ஞே நகரேச ரம்யே
விபூஷிதாங்கம் விவிதை: க போகை
ஸித் புக்திமுக்தி ப்ரதமீக மேகம்
ஸ்ரீநாகநாதம் சரணம்ப்ரபத்யே


தாருகாவனம் எனும் ஆமர்த தலத்தில் பல்வேறு வகையான நாகங்களை அணிகலன்களாகக் கொண்டு, தர்மத்திற்கு விரோதமல்லாத போகமும் மோட்சமும் தரக்கூடிய ஈசனாக மேனியெங்கும் திருநீறு பூசிக்கொண்டருளும் பரமேஸ்வரனான நாகநாதனை வணங்குகிறேன்.

ஸாநந்தமாநந்தவநே வஸந்தம்
ஆனந்த கந்தம் ஹதபாபப்ருந்தம்
வாரணாஸி நாதமநாத நாதம்
ஸ்ரீ விஸ்வநாதம் சரணம் ப்ரபத்யே


ஆனந்தவனம், வாரணாசி எனும் அதியற்புதமான பெயர்களால் வழங்கப்படும் காசித்தலத்தில் பக்தர்களின் பாவங்களை அழிப்பவரும் ஆனந்தத்தை அளிப்பவரும் ஆதரவற்றவர்களுக்கு அபயமளிப்பதையே கடமையாகக் கொண்டவரும் ஆன காசி விஸ்வநாத மூர்த்தியை சரணடைகிறேன்.

ஸ்ரீதாம்ரபர்ணி ஜலராசியோகே
நிப்த்யஸேதும் நிசிபில்வபத்ரை:
ஸ்ரீராமசந்த்ரேண ஸமர்ச்சிதம் தம்
ராமேஸ்வராக்யம் ஸததாம் நமாமி


புனிதமான தாமிரபரணி ஆற்றின் நீர் கடலில் சங்கமமாகும் இடத்தில் அணைகட்டி ராமச்சந்திரமூர்த்தியினால் வில்வதளங்களால் அர்ச்சிக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதரை அனவரதமும் நமஸ்காரம் செய்கிறேன்.

ஸிம்ஹாத்ரி பார்ச்வேபி தடே ரமந்தம்
கோதாவரீ பவித்ர தேசே
யந்தர்சனாத் பாதகஜாதநா:
ப்ரஜாய தே த்ரயம்பகமிமீடே


ஸிம்ஹாத்ரி மலையின் தாழ்வறையில் இனிமையாக சஞ்சரிப்பவரும், மிகப் புனிதமான தக்ஷிண கங்கை என்னும் கோதாவரி நதிக்கரையில் இருப்பவரும், எவரைக் கண்ட மாத்திரத்திலேயே பாவங்கள் விலகி ஓடிடுமோ அந்த த்ரயம்பகேஸ்வரரை வணங்குகிறேன்.

ஹிமாத்ரிபார்ச்வேபி தடே ரமந்தம்
ஸம்பூஜ்யமானம் ஸததம்முனீந்த்ரை:
ஸுராஸுரையக்ஷ மஹோரகாத்யை
கேதாரஸம்ஜ்ஞயம் சிவமீச மீடே
ஹிமாச்சலத்தின் தாழ்வறையில் சஞ்சரிப்பதை விரும்பு

பவரும் சிறந்த முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள், உரகர்கள் மற்றும் முனிவர்களால் எப்போதும் ஆராதிக்கப்படுபவரும் ஈசன் என்று போற்றப்படுபவருமான கேதாரேஸ்வரரை நமஸ்கரிக்கிறேன்.

ஏலாபுரி ரம்ய சிவாலயேஸ்மிந்
ஸமுல்லஸந்தாம் த்ரிஜகத்வரேண்யம்
வந்தே மஹோதாரத்ர ஸ்வபாவம்
ஸதாசிவம் தம் திஷணேச்வராக்யம்

ஏலாபுரம் எனும் எல்லோராவில் உள்ள அழகிய சிவாலயத்தில் அருளாட்சி புரிந்து வருபவரும் மூன்று உலகில் உள்ளோராலும் போற்றப்படுபவரும், மிக மிக உயர்ந்த உவமை சொல்ல இயலாத குணத்தைக் கொண்டவரும், திஷணேஸ்வரரான சிவபெருமானை வணங்குகிறேன்.

ஏதா நி லிங்கா நி ஸதைவ மர்த்யா
ப்ராத: படந்த: அமல மா நசாஸ்ச
தே புத்ர பௌத்ரைர்ச்ச தநைருதாரை:
ஸத்கீர்த்திபாஜ: ஸுகிநோ பவந்தி

இந்தப் பன்னிரு ஜோதிர் லிங்கங்களின் துதியை தூயமனதுடன் தினமும் காலையில் துதித்தால் தலைமுறை தலைமுறையாக செல்வம், புகழ் போன்றவை விருத்தியாகும். கார்த்திகையன்று இத்துதியை பாராயணம் செய்பவர் வாழ்வு தீபம் போல் பிரகாசிக்கும்

Jyotirlinga sthothram Audio :
http://www.youtube.com/watch?v=a_9JasTsBMU






Click the following link to read Shanmuga Kavasam(and its mahimai) by Pamban Swamigal.

http://www.dheivamurasu.org/shanmuga-kavasam.htm

http://www.youtube.com/watch?v=N0ACRwib-nM



காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களை யாராலும் வெல்ல முடியாது.

நிரஞ்சனா
காலையில் எழுபவனை யாராலும் செல்ல முடியாது என்கிறது சாஸ்திரம். விடியற்காலையில் சேவலும் கோழியும் விழிக்கிறது. அதை பிரியாணி செய்துவிடுகிறார்களே என்று விதண்டாவாதம் பேசுபவர்களும் உண்டு. புனிதமான கடலுக்குள்ளே இருக்கும் ஜீவராசிகளுக்கு, சிப்பிக்குள் இருக்கும் முத்தால் லாபம் இல்லை. அதுபோல்தான் கோழி, சேவல் போன்றவையும். காலையில் எழுந்தாலும் இறைவனுடைய நாமத்தை அது உச்சரிக்குமா?. அதனால் மனிதன் விடியற்காலையில் எழுந்து இறைவனுடைய நாமத்தை உச்சரிப்பதும் அந்த நாமத்தை நினைப்பதுமாக இருக்க வேண்டும். காலை பொழுதில் எழுந்து தெய்வத்தை நினைத்து வணங்கினால், அவர்களை யாராலும் செல்ல முடியாது.
இரவு பணி செய்பவர்களுக்கு சாஸ்திரம் என்ன சொல்கிறது?
இரவு பணிசெய்பவர்கள் எப்படி விடியற்காலையில் எழுந்திருக்க முடியும்.? ஆகவே அவர்களுக்கு இந்த அறிவுரை பொருந்தாது. ஆரோக்கியமான மனநிலைக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். அதைவிட குறைவான நேரம் தூங்கினால் மனநல பாதிப்பு ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இரவு பணி செய்பவர்களுக்கு விடியற்காலை எழுந்திருக்க வேண்டிய சாஸ்திர கட்டாயம் இல்லை. நிம்மதியாக தூங்குபவர்கள் “நித்திராதேவி”யின் அருள் பெற்றவர்கள் என்கிறது சாஸ்திரம்.
ஆனால் இதுதான் சாக்கு என்று இரவில் சரியான நேரத்தில் உறங்குபவர்கள் காலை எட்டு மணிவரை தூங்க கூடாது. பொதுவாக பிரம்ம முகூர்த்தம் என்கிற நேரமான காலை 3 மணி முதல் 5 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும். முடியாதவர்கள் ஆறு மணிக்காவது எழுந்திருக்க வேண்டும்.  இந்த நேரத்தில் எழுந்தால் அவர்களின் உடல் உற்சாகம், வலிமை பெரும். கண்களுக்கும் நல்லது. காலை பொழுது “உஷத்காலம் என்கிறோம். “உஷத் என்றால் “உஷஸ் என்ற பெண் தேவதை. இவள் ஒரு அதிர்ஷ்ட தேவதை. இவள் எழுந்து பூமியை நோக்கி வந்த பிறகுதான் சூரியனே தோன்றுகிறார் என்கிறது ரிக் வேதம். இதனால்தான் பிரம்ம முகூர்த்தத்தில் நாமும் எழுந்து இறைவனுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை உச்சரித்தால், அப்படி மந்திரத்தை உச்சரிப்பவர்களின் வாழ்க்கை, சூரியனை போன்று பிரகாசமாக இருக்கும். அதிர்ஷ்ட தேவதையின் ஆசி அவர்களுக்கு கிடைக்கும். அவர்களை யாராலும் வெல்ல முடியாது என்கிறது சாஸ்திரம்.
ஏழையை பணக்காரன் ஆக்கிய மந்திரம்
மன்னர் அக்பரும் பீர்பாலும் நகர்வலம் சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது ஒருவர் அக்பரிடம், “அய்யா எனக்கு உதவ முடியுமா.?” என்றார். இதை கேட்ட அக்பர், அவருடைய குடும்ப கஷ்டத்தை கேட்டு, “தினமும் நான் உனக்கு பணம் தருகிறேன். நீ யாரிடமும் கை ஏந்தாதே” என்றார். ஆனால் பீர்பாலுக்கு இது பிடிக்கவில்லை. “அந்த ஏழைக்கு ஒரு நல்ல வேலையை அரசர் தந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு தினமும் அரசரிடம் யாசகம் கேட்பது ஒரு மனிதனுக்கு அவமானம் அல்லவா” என்று மனம் வருந்தினார்.
ஒருநாள் பீர்பால் அந்த ஏழையின் வீட்டுக்கு சென்று, “தினமும் நீ பத்து முறை காயத்திரி மந்திரத்தை உச்சரித்தால், அரசர் உனக்கு தரும் பணத்தை விட நான் உனக்கு இரண்டு மடங்கு பணம் தருகிறேன். ஆனால் நீ தினமும் பத்து முறை காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.” என்றார்.
பீர்பால் தருகிற பணத்துக்காக ஒருநாள் கூட தவறாமல்  காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வந்தான் அந்த ஏழை. பிறகு அதையே வாடிக்கையாக உச்சரிக்க ஆரம்பித்தான்.
“தினமும் நம்மிடம் யாசகம் பெற ஒரு ஏழை வருவானே. சில தினமாக அவன் வருவது இல்லையே. என்ன காரணம்?” என்று அறிய விரும்பிய மன்னர் அக்பர், பீர்பாலை அழைத்து கொண்டு அந்த ஏழையின் வீட்டுக்கு சென்றார்.
ஏழைக்கு கிடைத்த வாழ்க்கை
தன் வீட்டு திண்ணையில் அரசரிடம் உதவி பெற்று வந்த அந்த ஏழை அமர்ந்திருந்தான். அந்த நபரை பார்த்தவுடன் மன்னர் அக்பருக்கே வணங்க வேண்டும் போல் இருந்து. அந்த அளவு அந்த ஏழையின் முகத்தில் ஒரு தெய்வீகக் கலை தெரிந்தது. அந்த ஏழையை சுற்றி மக்கள் கூட்டமாக இருந்தார்கள். மக்களுக்கு அந்த ஏழை அருள் சொல்லுவதும் அவர்களுடைய மனகஷ்டத்தை தீர்க்க நல்ல ஆலோசனைகளை சொல்வதுமாக ஒரு மகானை போல மாறி இருந்தான் அந்த ஏழை.
இதை கண்ட அக்பர் ஒருவரை அழைத்து, “நீங்கள் ஏன் அவரிடம் ஆசி பெறுகிறீர்கள்? என்றார். “அவர் சாதாரணமானவர் அல்ல. தெய்வ பிறவி. அவர் சொல்வது எல்லாம் அப்படியே நடக்கும். அத்துடன் அவர் கைகளால் திருநீறு வாங்கினால், தீராத வியாதியும் தீரும்.” என்றார்.
இதை கேட்ட அக்பருக்கு ஆச்சரியம். சில மாதங்களுக்கு முன் நம்மிடம் கையேந்தி யாசகம் கேட்டவனுக்கு, எப்படி இவ்வளவு சக்தி வந்தது?” என்று ஆச்சரியத்துடன் அந்த நபரிடமே நேரடியாக சென்று கேட்டார் அக்பர்.
மன்னர் அக்பரையும், பீர்பாலையும் கண்டு மகிழ்ந்த அந்த நபர், தன் சக்தியின் ரகசியத்தை சொன்னார்.
“அரசே இந்த சக்தி எனக்கு வந்ததற்கு காரணம் அமைச்சர் பீர்பால்தான். அவர் தினமும் என்னை காயத்ரி மந்திரத்தை பத்து முறை உச்சரிக்க சொன்னார். அப்படி உச்சரித்தால் நீங்கள் எனக்கு கொடுத்த வந்த பண உதவியை விட, அமைச்சர் பீர்பால் இரண்டு மடங்கு தருகிறேன் என்றார். அதனால் அன்றுமுதல் கடமைக்காக காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்த நான், பிறகு பக்தியுடனும் நம்பிக்கையுடனும் மனதிருப்தியுடன் உச்சரிக்க ஆரம்பித்தேன். இதன் பயனால் என்னையறியாமல் என் உடலுக்கு புது தேஜசும், அற்புதமான சக்தியும் உண்டாவதை உணர்ந்தேன். அந்த ஆற்றலைதான் மக்களின் உடல்நல கோளாறு, மன கோளாறு தீர ஆசி வழங்குகிறேன். மக்களும் பயன் பெறுகிறார்கள். நானும் முன்னேற்றம் அடைகிறேன்.” என்றார் அந்த நபர்.
அதிகாலை வேலையில் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் முகம் அழகு பெறும். உடல் நலம் பெறும். குடும்பத்தில் லஷ்மிவாசம் செய்யும். எடுத்த எல்லா முயற்சியும் வெற்றி பெரும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் காயத்ரி மந்திரம் இருக்கிறது. அத்தனையும் சொல்ல நேரம் இல்லாதவர்கள்,  இங்கு நான் குறிப்பிட்டு இருக்கும் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்.
பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாமா?
பெண்கள் காயத்ரி மந்திரத்தை  சொல்ல கூடாது என்பார்கள். அப்படியல்ல. காயத்ரி தேவியே பெண்தான். ஆகவே பெண்களும் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம். ஆனால் இந்த காயத்ரி மந்திரத்தை சொல்பவர்கள், குளிர்சியான மோர், குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும். காயத்ரி மந்திரம் உஷ்ண தன்மை கொண்டது என்கிறது சாஸ்திரம். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு தெரியப்படுத்தியவர் விஸ்வாமித்திரர்.
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களை கண்திருஷ்டி நெருங்காது. துஷ்ட சக்திகளை-துஷ்ட எண்ணம் கொண்டு பழகுபவர்களை பொசிக்கி விடும். காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்கள் நலமும் வளமும் பெற்று வாழ்வார்கள்.
காயத்ரி மந்திரம்
ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்


 

 




Bhishma Ekadasi is an auspicious occasion,observed on Shukla Ekadashi of Magh (Jan-Feb) month.It is the birth day of "Shri Vishnu Sahasra Nama Sthothram".This stotra was revealed to Pandavas by Bhishma Pitamaha ,while he was on 'Sharashaiyya' (on the bed of arrows) after the Mahabharatha war. Bhishma had great experiences of life and hence the Pandavas approached Bhishma Pitamaha,to learn from him the higher principles of life and wisdom.Bhishma revealed "Vishnu Sahasranama Stotra" to Pandavas,on Magha Suddha Ekadasi day,when Lord Krishna was present.
Pitamaha exclaimed that Shri.Vishnu is Lord of all Lords and praying Him with all 1000 names is all one can ever do to become more dear to Him which itself leads to salvation.Reciting it regularly or even listening to it is also a great achievement, that empowers one with the strength to overcome all the difficulties and get on to the right path of Salvation.
It is strongly beleived that he who chants "Shri Vshnu Saharanama Stotra" three times a day,regularly,is freed from all worries and gets moksha.Many scholars have written bhashyam on Vishnu saharanamam.which are Sankara bhasyam, and Ramanuja bhashyam while other bhashyam also exists.
On this day,in most of the temples,"Vishnu saharanama stotra" chanting continues for 24 four hours, with archana every hour or two.The Lord Vishnu is the essense of everything. He is panchanga- tithi, vaara, nakshatra, yoga and karana.He is time, space, and causation. He is the one who controls maya.
It is well known fact that, during the end rights of all poojas,only god Visnu is worshipped who gives moksha,which is his decision.We need to be Vishnumay,which is possible only when we get drowned ourself into the ocean of his "Sahasra Nama".One can also continuously listen to the audio CD of "Vishnu Sahasra Nama".








To VARAAHA DWAADASI :

LAKSHMI VARAHA GAYATHRI

Om Bhoovaraahaayei Vidhmahe' Rathneiswareicha Dheemahi
Thanno Devi Pracho Dhayaath


To see full history of Varaha :

http://harekrishnacalendar.com/vaishnava-calendar/varaha-dvadasi-2015/

http://www.youtube.com/watch?v=vW7iD6N7HAM

Today SANI PRADHOSHAM...

VISIT www.pradhosham.com


Om Vethrahastaaya Vidhmahe' Dhanka hastaaya Dheemahi
Thanno Namdlhi Pracho Dhayaath.





Om Bhaaskaraaya Vidhmahe' Mahaajyothischakraaya Dheemahi
Thanno Suryah prachodayath.

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Saturday 16 February 2013

ரதசப்தமி 17.02.2013





சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த நாள்தான் ரதசப்தமி. உத்ராயன தை அமாவாசைக்குப் பின்வரும் ஏழாவது நாள் (சப்தமி திதி) ரதசப்தமி என்று போற்றப்படுகிறது. சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்தில், இந்த சப்தமி திதியிலிருந்துதான் தன் ஒளிக்கதிர்களுக்கு வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.
ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய உதயத்திற்குமுன் எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு ஆண்கள் சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகள் ஏழு எடுத்து அத்துடன் அட்சதையும் (சிறிதளவு பச்சரிசி) விபூதியையும் தலையின்மீது வைத்துக்கொண்டு கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும். பெண்கள் (கன்னி மற்றும் சுமங்கலிகள்) ஏழு எருக்கன் இலைகள் மேல் சிறிதளடு மஞ்சள் தூளையும் அட்சதையையும் வைத்துக்கொண்டு நீராட வேண்டும். சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து உடல்நலத்தை வலுப்படுத்தும் என்பது ஐதீகம். அதற்குப்பின் சூரிய நமஸ்காரம் அவசியம் செய்யவேண்டும். அப்போது அர்க்ய மந்திரம் சொல்லி நீர்விட வேண்டும். வேதம் அறிந்த விற்பன்னர்களிடம் உபதேசம் பெற்று மந்திரத்தை அறிந்துகொள்வது நலன் தரும்.
ஆயுள், ஆரோக்யம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே. தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், அன்றுமுதல் வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட புராண நூல்கள் சொல்கின்றன. அதாவது அன்றுதான் தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது. அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம். நீராடும்போது, ஏழு எருக்கிலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந் தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும். வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டபின், தண்ணீர் ஊற்றிக்கொண்டு குளிக்கலாம். இப்படிச் செய்வதால் நம் பாவங்கள் விலகி பகலவனைக் கண்டு பனி மறைவது போல மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதிகம்.
அன்றைய தினம் குளித்து முடித்தபின் சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும். எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது போன்ற அர்க்கியம் விடுவது. எனவே ரத சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் உடையது. சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். பொங்கல் வைத்து அது சூடு ஆறும் முன்பாக நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க் கோலம் போடுவது பலரது வழக்கம். இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு.
நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர். பார்வைக்குத் தெரியும் பகவானை பகலவனை ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா! என்று சொல்லி வணங்கலாம். அறிவு, ஆற்றல், ஆரோக்யம், ஆயுள் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து அளித்தவர் சூரியன். சூரியனை பொங்கலன்றும் ரத சப்தமி நாளிலும் மட்டும் வழிபடாமல் தினமுமே வணங்கலாம். ஆதவனை வழிபடுவோர் வாழ்வில் தீவினை இருள் விலகி நன்மை ஒளி பரவும் என்பது நிச்சயம்!


For slokas to be recited :

http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_30.html

http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_6124.html

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Thursday 14 February 2013

Daily Holy Slokas










ஆதிசங்கரர் அருளிய ஆஞ்சநேயர் புஜங்க ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.

ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்சநாங்கம்
ஜகத்பீதாஸெளர்யம் துஷாராத்ரிதைர்யம்
த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம்
பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்
பொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமா போற்றி.

பஜே ராம ரம்பாவநீ நித்யவாஸம்
பஜே பாலபாநு ப்ரபாசாருபாஸம்
பஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம்
பஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம்
பேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சூரியனை பழமென்று எண்ணிப் பாயந்தவன். தீமைகளை அடியொடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.

பஜே லக்ஷ?மணப்ராண ரஹாதிதக்ஷம்
பஜே தோஷிதாநேக கீர்வாண பக்ஷம்
பஜே கோர ஸங்க்ராம ஸீமாஹதாக்ஷம்
பஜே ராமநாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்
லக்ஷ?மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி. சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

க்ருதா பீலநாதம் சிதிஷிப்த பாதம்
சநக்ராந்த ப்ருங்கம் கடிஸ்தோரு ஜங்கம்
யத்வ்யாப்வ கேஸம் புஜா ஸ்ரோஷி தாசம்
ஜய ஸமேதம் பஜே ராமதூதம்
சிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்ய அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.

சலத்வாலகாத் ப்ரமச்சக்ரவாளம்
கடோராட்டஹாஸ ப்ரபிந்நாப் ஜஜாண்டம்
மஹாஸிம்ஹநாதாத் விஸீர்ணத்ரிலோகம்
பஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம்
ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய். நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.

ரணே பீஷிணே மேகநாதே ஸநாதே
ஸரோஷம் ஸமாரோப்யஸிவாவ்ருஷ்டி முக்ராம்
ககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே
நடந்தம் மஹாந்தம் ஹநூமந்தமீடே
போரிலே நீ ருத்ரனாக எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது - ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது - நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமந்தன் பெருமையை யாரால் எப்படிக் கூற இயலும் ?! எவராலும் முடியாது !

கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா
கநத்தந்த நிர்தூத காலோக்ர தந்தம்
பதாகாதபீ தாப்தி பூதாதிவாஸம்
ரண÷க்ஷõணிதாக்ஷம்பஜே பிங்காளக்ஷம்
பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன். உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.

மஹாக்ரோபீடாம் மஹோத்பாத பீடாம்
மஹாக்ராஹபீடாம் மஹா தீவ்ரபீடாம்
ஹரந்தயாஸுதே பாதபத்மாநுரக்கா:
நமஸ்தே கபிச்ரேஷ்டராமப்ரியாய
ராமனுக்கு இனியனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.

ஸுதாஸிந்து முல்லங்க்ய நாக ப்ரதீப்தா:
ஸுதா சௌஷதீஸ்தா ப்ரகுப்தப்ரபாவா க்ஷணே
த்ரோணசைலஸ்ய ப்ருஷ்டே ப்ரரூடா:
த்வயா வாயுஸூநோ கிலாநீய தத்கா:
பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.

நிராதங்கமாவிச்ய லங்காம் விசங்கோ
பவாநேவ ஸீதாதி ஸோகாபஹாரீ:
ஸமுத்ரம் தரங்காதி ரௌத்ரம் விநித்ரம்
விலங்க்யோ ருஜங்காஸ்துதோமர்த்ய ஸங்கை:
பொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே ! தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் வெஞ்சினத்திற்குத் தப்பியது  ? உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை÷ உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி ?

ரமானாக ராம க்ஷமாநாத ராமம்
அசோகே ஸ்சோகாம் விதாய ப்ரஹர்ஷம்
வினார்தர்கநாம் ஜீவநாம் தானவானம்
விடாப்ய பிரஹர்ஷாத் ஹநுமத் ஸ்த்வமேம
ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே ! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே ! இதற்கு என்ன தவம் செய்தனை ?

ஜராபாரதோ பூரி பீடாம் சரீரே
நீரதாரணரூட காட ப்ரதாபி
பவத் பாத பக்தீம் பவத் பக்தி ரக்திம்
குரு ஸ்ரீ ஹநுமத் பிரபோமே தயாளோ!
குருவே ஸ்ரீஹனுமனே ! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன் மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபுவாக உள்ளவன் நீயே ! உன்னைத் துதிக்கிறோம்.

மஹாயோகிநோ ப்ரஹ்மருத்ராதயோ வா
ந ஜாநந்தி தத்வம் நிஜம் ராகவஸ்ய
கதம் ஜ்ஞாயதே மாத்ருசைர் நிதயமேவ
ப்ரஸீத ப்ரபோ மாருதே நமஸ்தே
ருத்ரனும் பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே ! தத்துவமும் தர்க்கமும்  அறிந்தவன் நீ ! இசையில் லயிப்பவன் ! எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே ! உன்னைப் போற்றுகிறேன்.

நமஸ்தே மஹாஸத்வ பாஹாய துப்யம்
நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம்
நமஸ்தே பராபூதஸூர்யாய துப்யம்
நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம்
சத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாழு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.

நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்
நமஸ்தே பிங்களாக்ஷõய துப்யம்
நமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்
நித்ய பிரம்மசாரியே போற்றி ! வாயு மைந்தனே போற்றி ! எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.

ஹநூமத் புஜங்க ப்ரயாதம் ப்ரபாதே
ப்ரதோஷேபி வா சார்தராத்ரேபி மர்த்ய
படந் பக்தியுக்த: ப்ரமுக் தாகஜால: நமஸ்
ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி

இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு  தினமும் மாலை நேரத்தில் ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும். சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும் சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.



அமைதியான வாழ்வு பெற ஸ்ரீராம ஸ்தோத்திரம்

இச்சுலோகத்தை நாள்தோறும் பத்து முறை கூறி பாராயணம் செய்தால் தோஷங்கள் விலகி நிம்மதியான வாழ்வு பெறலாம். மன நிம்மதி, குடும்ப அமைதி ஆகியவைகள் கிட்டும்.

ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தானா மார்த்தி பீதானாம் பீதி நாசனம்
த் விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
ஸன்னத்த: கவசீ கட்கீசாப பாண தரோயுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ?மண
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராயச
கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே
ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம
அக்ரத: ப்ருஷ்ட தச்சைவ பார்ச் வதஸ்ந மஹாபலௌ
ஆகர்ண பூர்ணதன்வானௌ ரக்ஷதாம் ராமலக்ஷ்மணௌ



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪