Friday 13 February 2015

மஹா சிவராத்திரி - 17.02.2015

அன்னை பார்வதி சிவ பூஜை செய்யும் காட்சி



விரி கடலும், மண்ணும், விண்ணும், மிகு தீயும், புனல், காற்றாகி எட்டு திசையான சங்க வெண்குழைக் காதுடை செம்பவள மேனி எம் இறைவன் சிவ பரம் பொருளுக்கு மிகவும் உகந்த அஷ்ட மஹா விரதங்களாக ஸ்கந்த புராணம் கூறுபவை 1. சோம வார விரதம், 2.திருவாதிரை, 3.உமா மஹேஸ்வர விரதம், 4. மஹா சிவராத்திரி விரதம், 5.கேதார விரதம், 6. கல்யாண விரதம், 7. சூல விரதம் 8. ரிஷப விரதம், ஆகியவை ஆகும்।



இந்த விரதங்கள் அனைத்தும் நமது உடலையும் உள்ளத்தையும் து‘ய்மைப்படுத்தி இந்த சம்சார சாகரத்திலிருந்து நம்மை விடுவித்து அந்த இறைவனுடைய திருவடியில் சரணடைய உதவுகின்றன। இவற்றுள் மஹா சிவராத்திரியின் மேன்மையையும், அதைக் கொண்டாடுவதால் நாம் அடையும் பலன்களையும் இந்த நன்னாளை ஒட்டி திருவிழாக்கள் நடைபெரும் இரு அம்மன்களின் வரலாறுகளையும் பற்றிப் பார்ப்போமா?


மஹா சிவராத்திரி நாள்: அகில உலகமும் பெருங் கடல் மூடிப் பிரளயம் ஏற்படும் ஊழிக் காலத்தில் சகல ஜீவ ராசிகளும் எம் ஐயனின் காலடியில் ஒடுங்குகின்றன. அப்போது கங்காளராய் எம் ஐயன் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க ஓம் என்னும் பிரணவத்தை நல் வீணையில் வாசித்துக் கொண்டு இருப்பார். இதை அப்பர் பெருமான் தம் பதிகத்தில் இவ்வாறு பாடுகின்றார்,

பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் கபேளரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல் வீணை வாசிக்குமே!.

திருக்காளத்தி வாயு லிங்கம்


அந்த பிரளய காலத்தில் எம் அம்மை பார்வதி உயிர்களுக்கு இரங்கி தவம் கிடந்து இறைவனை பூஜை செய்த இரவே சிவராத்திரி ஆகும். பின்னர் படைப்பு தொடங்கிய பிறகு இந்நாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் எல்லா நன்மைகளையும் வழங்க வேண்டும் என்ற அம்மையின் வேண்டுகோளுக்கிணங்கி சிவ ராத்திரி நன்னாளில் அவரை வழிபடுபவர்களுக்கு இம்மையில் எல்லா சுகங்களையும் அளிப்பதுடன் வீடுப் பேற்றையும் அருளுகின்றார்.



தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் விஷ்ணுவும் சண்டையிட்டனர், அவர்களது கர்வத்தை அடக்க சிவ பெருமான் பெரிய நெருப்பு பிழம்பாய் நின்று அடியும் முடியும் கண்டு பிடிக்குமாறு கூற இருவராலும் கண்டுபிடிக்க முடியாமற் போனது। இவ்வாறு எம்பெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாய் நின்ற நாள் திருக்கார்த்திகை ஆகும். பின் இருவரும் சிவ லிங்க ரூபமாக அவரை வணங்காத தமது தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்ட, மஹா சிவராத்திரி நன்னாளில் எம்பெருமான் லிங்க ரூபமாக தோன்றி இருவருக்கும் அருள் வழங்கின நாள் என்பதும் ஒரு ஐதீகம்.

தேவி தவமிருந்து இடப்பாகம் பெற்ற நாள்,

அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதம் பெற்ற நாள்,

கண்ணப்பர் கண்ணை அப்பி முக்தி பெற்ற நாள்,

பாகீரதன் தவம் செய்து கங்கையை நிலவுலகிற்கு கொண்டு வந்த நாள்
\
என்று இந்நாளின் சிறப்புக்காக பல்வேறு ஐதீகங்கள் உள்ளன.

சிவராத்திரி நித்ய, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணம் கூறுகின்றது.

நித்ய சிவராத்திரி : தினம் தோறும் வரும் இரவு நித்ய சிவராத்திரி ஆகும்.

மாத சிவராத்திரி : ஒவ்வொரு மாதமும் வரும் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி மாத சிவராத்திரி ஆகும்.

பக்ஷ சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ பிரதமை முதல் சதுர்த்தசி வரை 13 நாட்கள் பக்ஷ சிவராத்திரி ஆகும்.

யோக சிவராத்திரி : திங்கட்கிழமையில் இரவு பகல் முழுவதும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும்.

மஹா சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி இரவு மஹா சிவராத்திரி.

இவற்றுள் மஹா சிவராத்திரி விரதம் தான் வெகு சிறப்பாக பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
 
முதல் கால பூஜைஇந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாவது கால பூஜை
இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.
மூன்றாவது கால பூஜைஇந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும்.
இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காவது கால பூஜைஇந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!
சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும் சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.

சிவராத்திரி விரத முறை : சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக்கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,

த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச
த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்
என்றபடி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்ல மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தென்னகத்திலே திருக்கோவில்களிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திகளுக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வட நாட்டிலே எல்லா திருக்கோவில்களிலும் சிவராத்திரியன்று நாமே சென்று நம் கையால் நீராலோ, பாலாலோ லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய முடியும்.

மஹா சிவராத்திரி விரதப்பலன்: அம்மை வேண்டிக் கொண்டதற்கிணங்க நாம் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் அந்த கயிலை நாதன் நமக்கு இம்மையில் நம்து எல்லா தோஷங்களியும் நீக்கி, பய உணர்வை அகற்றி, தீராப் பிணிகளை தீர்த்து, மனக்கவலைகளை மாற்றி சகல மங்களங்களையும் வழங்குவதுடன் நமக்கு மறு பிறப்பு இல்லாமல் சிவகணங்களுள் ஒருவராகும் வாய்ப்பையும் வழங்குகிறார். எடுத்துக்காட்டாக புராணங்களில் கூறப்பட்டுள்ள ஒரு வேடனின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு வேடன் வாழ்ந்து வந்தான் ஒரு நாள் அவன் வேட்டை ஆடும் போது ஒரு புலி அவனை துரத்தியது. புலியிடமிருந்து தப்பிக்க அவன் ஒரு மரத்தின் மேலே ஏறிக் -காண்டான்.புலியும் மரத்தின் கீழே அவன் இறங்கி வந்தால் அவனைக் கொன்று புசிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. பகல் முழுவதும் இவ்வாறு அவன் ஒன்றும் சாப்பிடாமல் மரத்தின் மேலேயே இருந்தான். அந்தியும் ஆகியது புலியும் நகர வில்லை வேடனாலும் கீழே வர முடியவில்லை. இரவிலே து‘ங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே தன் குடுவையில் இருந்த தண்ணிரையும் கீழே ஊற்றிக் கொண்டிருந்தான். காலை புலர்ந்தது புலி ஓடி விட்டது, வேடனும் கீழிறங்கி வந்து தன் இருப்பிடம்் சென்றான். அவன் அவ்வாறு அமர்ந்திருந்த மரத்தின் அடியில் ஒரு சிவ லிங்கம் இருந்ததாலும், அந்த மரம் வில்வ மரமாக இருந்ததாலும், அந்த இரவு சிவராத்திரியாக இருந்ததாலும் புலியின் பயத்தினாலேயே வேடன் இவ்வாறு பகலில் உணவு உண்ணாமலும் இரவிலே லிங்க மூர்த்திக்கு அபிஷேகமும் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்ததால் வேடனுக்கு சிவராத்திரி விரதப் பலனைக்கொடுத்து முக்தி கொடுத்தருளினார் எம்பெருமான். நாமும் து‘ய மனத்தோடு இந்த விரதத்தை மேற்கொண்டால் அந்த இறைவனது அருளைப் பெறலாமே.

வேடன் இவ்வாறு முக்தி பெற்ற ஐதீகம் நடைபெற்றதாகக் கூறப்படும் தலங்கள் திருவைகாவூர் மற்றும் பெரும் புலியூர் ஆகும் இத்தலங்களில் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் மற்ற தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீ கோகர்ணம் ஆகும்.

சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம், ஆதி சேஷன் எப்போதும் இந்த பூவுலகைச் சுமந்து கொண்டிருப்பதால் தன் பலமனைத்தையும் இழந்து தவித்த போது, ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் திருக்குடந்தையில் (கும்பகோணம்) நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேஸ்வரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் தரிசித்ததால் தான் இழந்த பலமனைத்தையும் பெற்றார் என்பதால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்பதும் சர்ப்ப தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.

இத்தகைய சிறப்புகளையுடைய மஹா சிவராத்திரி நன்னாளில் நாமும் விரதம் அனுஷ்டித்து மாதொரு பாகனான எம் பெருமானின் அருளுக்கும், அம்மையின் அருளுக்கும் பாத்திரமாவோமாக.
 
 
ஓம் லிங்கமே போற்றி
ஓம் அபய லிங்கமே போற்றி
ஓம் அக்ஷர லிங்கமே போற்றி
ஓம் அகண்ட லிங்கமே போற்றி
ஓம் அப்பு லிங்கமே போற்றி
ஓம் அபூர்வ லிங்கமே போற்றி
ஓம் அனாதி லிங்கமே போற்றி
ஓம் அனுக்ரஹ லிங்கமே போற்றி
ஓம் அர்ச்சாரூப லிங்கமே போற்றி
ஓம் அபிஷேகப்ரிய லிங்கமே போற்றி
ஓம் அம்ருத லிங்கமே போற்றி
ஓம் அவ்யக்த லிங்கமே போற்றி
ஓம் அநேகரூப லிங்கமே போற்றி
ஓம் அசலேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் அத்ரீஸ்வர லிங்கமே போற்றி
ஓம் அனந்தேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் அந்தகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் அருள் லிங்கமே போற்றி
ஓம் அருணாசல லிங்கமே போற்றி
ஓம் அனந்த லிங்கமே போற்றி
ஓம் ஆதி லிங்கமே போற்றி
ஓம் ஆதிமகாபல லிங்கமே போற்றி
ஓம் ஆத்ம லிங்கமே போற்றி
ஓம் ஆதார லிங்கமே போற்றி
ஓம் ஆனந்த லிங்கமே போற்றி
ஓம் ஆரண்ய லிங்கமே போற்றி
ஓம் ஆகர்ஷித லிங்கமே போற்றி
ஓம் ஆலாஸ்ய லிங்கமே போற்றி
ஓம் ஆகம லிங்கமே போற்றி
ஓம் ஆகாஸ லிங்கமே போற்றி
ஓம் ஆர்ஷ லிங்கமே போற்றி
ஓம் ஆசுர லிங்கமே போற்றி
ஓம் ஆன்மார்த்த லிங்கமே போற்றி
ஓம் ஆபத்பாந்தவ லிங்கமே போற்றி
ஓம் ஆத்யந்த லிங்கமே போற்றி
ஓம் ஆவர்த்தேச லிங்கமே போற்றி
ஓம் இஷ்ட லிங்கமே போற்றி
ஓம் இஷ்டரூப லிங்கமே போற்றி
ஓம் இந்திர லிங்கமே போற்றி
ஓம் இஷ்டாபூரித லிங்கமே போற்றி
ஓம் இகபரதாயக லிங்கமே போற்றி
ஓம் ஈர்க்கும் லிங்கமே போற்றி
ஓம் உக்ர லிங்கமே போற்றி
ஓம் உத்தமோத்தம லிங்கமே போற்றி
ஓம் ஊர்த்துவ லிங்கமே போற்றி
ஓம் ஏகாந்த லிங்கமே போற்றி
ஓம் ஓங்கார லிங்கமே போற்றி
ஓம் ஓங்காரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் ஓளஷத லிங்கமே போற்றி
ஓம் கனக லிங்கமே போற்றி
ஓம் கந்த லிங்கமே போற்றி
ஓம் கன்ம சாதாக்கிய லிங்கமே போற்றி
ஓம் கர்த்ரு சாதாக்கிய லிங்கமே போற்றி
ஓம் கண்டகேசுவர லிங்கமே போற்றி
ஓம் கர்த்தமேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் கடுகேச லிங்கமே போற்றி
ஓம் கபாலீஸ்வர லிங்கமே போற்றி
ஓம் காண லிங்கமே போற்றி
ஓம் காருண்ய லிங்கமே போற்றி
ஓம் காசி லிங்கமே போற்றி
ஓம் காஞ்சி லிங்கமே போற்றி
ஓம் காளத்தி லிங்கமே போற்றி
ஓம் காம்பீர்ய லிங்கமே போற்றி
ஓம் காலசம்ஹார லிங்கமே போற்றி
ஓம் கிரி லிங்கமே போற்றி
ஓம் கீர்த்தி லிங்கமே போற்றி
ஓம் கிருபாசாகர லிங்கமே போற்றி
ஓம் கிருத்திவாகேச லிங்கமே போற்றி
ஓம் கும்பேச லிங்கமே போற்றி
ஓம் குப்தேச லிங்கமே போற்றி
ஓம் குஸ்மேஸ லிங்கமே போற்றி
ஓம் குபேரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் குரு லிங்கமே போற்றி
ஓம் குணபர லிங்கமே போற்றி
ஓம் குமாரேசுவர லிங்கமே போற்றி
ஓம் கேதார லிங்கமே போற்றி
ஓம் கைலாச லிங்கமே போற்றி
ஓம் கோடி லிங்கமே போற்றி
ஓம் கோடீஸ்வர லிங்கமே போற்றி
ஓம் கோள லிங்கமே போற்றி
ஓம் கோமய லிங்கமே போற்றி
ஓம் கோமேதக லிங்கமே போற்றி
ஓம் கோகர்ணேசுர லிங்கமே போற்றி
ஓம் கோதூமேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சர்வதேசிக லிங்கமே போற்றி
ஓம் சர்வதேவரூப லிங்கமே போற்றி
ஓம் சங்கர லிங்கமே போற்றி
ஓம் சங்கடஹர லிங்கமே போற்றி
ஓம் சயில லிங்கமே போற்றி
ஓம் சயிலேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சர்வசம லிங்கமே போற்றி
ஓம் சப்தேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சதாசிவ லிங்கமே போற்றி
ஓம் சச்சிதானந்த லிங்கமே போற்றி
ஓம் சகஸ்ர லிங்கமே போற்றி
ஓம் சம்ஹார லிங்கமே போற்றி
ஓம் சந்திரகாந்த லிங்கமே போற்றி
ஓம் சரண்யேசுவர லிங்கமே போற்றி
ஓம் சக்தீஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சண்டீஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சங்கரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சங்கமேசுவர லிங்கமே போற்றி
ஓம் சந்திரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சதுர்வேதப்ரிய லிங்கமே போற்றி
ஓம் சாக்ஷி லிங்கமே போற்றி
ஓம் சாந்த லிங்கமே போற்றி
ஓம் சாளக்ராம லிங்கமே போற்றி
ஓம் சிரேஷ்ட லிங்கமே போற்றி
ஓம் சிவ லிங்கமே போற்றி
ஓம் சிவாதிக லிங்கமே போற்றி
ஓம் சித்த லிங்கமே போற்றி
ஓம் சித்தி தாயக லிங்கமே போற்றி
ஓம் சித்திர லிங்கமே போற்றி
ஓம் சிம்மேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சிவசாதாக்கிய லிங்கமே போற்றி
ஓம் சிவசக்தி ஐக்கிய லிங்கமே போற்றி
ஓம் சிதம்பர லிங்கமே போற்றி
ஓம் சீதள லிங்கமே போற்றி
ஓம் சுத்த லிங்கமே போற்றி
ஓம் சுயம்பு லிங்கமே போற்றி
ஓம் சுரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சுக்ரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சுந்தர லிங்கமே போற்றி
ஓம் சூர்யகாந்த லிங்கமே போற்றி
ஓம் சூலேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் சூர்யேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி
ஓம் சூஷ்ம லிங்கமே போற்றி
ஓம் ஸ்திர லிங்கமே போற்றி
ஓம் ஸ்தாபித லிங்கமே போற்றி
ஓம் ஸ்வர்ண லிங்கமே போற்றி
ஓம் ஸ்வஸ்திக லிங்கமே போற்றி
ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி
ஓம் சைதன்ய லிங்கமே போற்றி
ஓம் சோம நாத லிங்கமே போற்றி
ஓம் சோமேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் ஜய லிங்கமே போற்றி
ஓம் ஜம்பு லிங்கமே போற்றி
ஓம் ஜகந்நாத லிங்கமே போற்றி
ஓம் ஜகத்ரஷக லிங்கமே போற்றி
ஓம் ஜல லிங்கமே போற்றி
ஓம் ஜங்கம லிங்கமே போற்றி
ஓம் ஜீவ லிங்கமே போற்றி
ஓம் ஜோதி லிங்கமே போற்றி
ஓம் தர்ப்ப லிங்கமே போற்றி
ஓம் தர்மேசுவர லிங்கமே போற்றி
ஓம் தண்டுல லிங்கமே போற்றி
ஓம் தாருஜ லிங்கமே போற்றி
ஓம் தசாசுவமேத லிங்கமே போற்றி
ஓம் தாராப்ரிய லிங்கமே போற்றி
ஓம் தாம்ர லிங்கமே போற்றி
ஓம் தான்ய லிங்கமே போற்றி
ஓம் த்ரிமூர்த்தி ரூப லிங்கமே போற்றி
ஓம் த்ரியம்பகேசுவர லிங்கமே போற்றி
ஓம் திவ்ய லிங்கமே போற்றி
ஓம் தீக்ஷ்ணேச லிங்கமே போற்றி
ஓம் துக்தேச லிங்கமே போற்றி
ஓம் துந்துகேசுவர லிங்கமே போற்றி
ஓம் தூரேச லிங்கமே போற்றி
ஓம் தேவ லிங்கமே போற்றி
ஓம் தேவி லிங்கமே போற்றி
ஓம் தேஜோ லிங்கமே போற்றி
ஓம் தைவீக லிங்கமே போற்றி
ஓம் த்ரைலோஹிக லிங்கமே போற்றி
ஓம் நடன லிங்கமே போற்றி
ஓம் நக்ஷத்ர லிங்கமே போற்றி
ஓம் நந்தீஸ்வர லிங்கமே போற்றி
ஓம் நகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் நந்தகேசுவர லிங்கமே போற்றி
ஓம் நவரத்தின லிங்கமே போற்றி
ஓம் நவநீத லிங்கமே போற்றி
ஓம் நாக லிங்கமே போற்றி
ஓம் நாகாபரண லிங்கமே போற்றி
ஓம் நாகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் நாருகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் நாதப்ரிய லிங்கமே போற்றி
ஓம் நாமப்ரிய லிங்கமே போற்றி
ஓம் நிர்மல லிங்கமே போற்றி
ஓம் நைர்ருத லிங்கமே போற்றி
ஓம் நித்ய லிங்கமே போற்றி
ஓம் நிருத்யப்ரிய லிங்கமே போற்றி
ஓம் பர லிங்கமே போற்றி
ஓம் பராபர லிங்கமே போற்றி
ஓம் பஞ்ச லிங்கமே போற்றி
ஓம் பஞ்சமுக லிங்கமே போற்றி
ஓம் பஞ்சாக்ஷர லிங்கமே போற்றி
ஓம் ப்ரசாத லிங்கமே போற்றி
ஓம் ப்ரதிஷ்டித லிங்கமே போற்றி
ஓம் ப்ரதஷிணப்ரிய லிங்கமே போற்றி
ஓம் ப்ரணவ லிங்கமே போற்றி
ஓம் ப்ராண லிங்கமே போற்றி
ஓம் ப்ரம்ம லிங்கமே போற்றி
ஓம் ப்ரம்மாண்ட லிங்கமே போற்றி
ஓம் பஸவ லிங்கமே போற்றி
ஓம் பத்ரேசுவர லிங்கமே போற்றி
ஓம் பவழ லிங்கமே போற்றி
ஓம் பக்வ லிங்கமே போற்றி
ஓம் பக்தப்ரிய லிங்கமே போற்றி
ஓம் பத்ரி லிங்கமே போற்றி
ஓம் பத்மப்ரிய லிங்கமே போற்றி
ஓம் பஞ்சபூத லிங்கமே போற்றி
ஓம் பத்மராக லிங்கமே போற்றி
ஓம் பக்தவத்ஸல லிங்கமே போற்றி
ஓம் பக்ததாச லிங்கமே போற்றி
ஓம் பரார்த்த லிங்கமே போற்றி
ஓம் பாண லிங்கமே போற்றி
ஓம் பாஹ்ய லிங்கமே போற்றி
ஓம் பார்த்திவ லிங்கமே போற்றி
ஓம் பாபநாச லிங்கமே போற்றி
ஓம் பாண்டவேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் பிரகதீஸ்வர லிங்கமே போற்றி
ஓம் பிரகாச லிங்கமே போற்றி
ஓம் பிரதோஷ லிங்கமே போற்றி
ஓம் பிலேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் பீமேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் பீஜ லிங்கமே போற்றி
ஓம் பீமசங்கர லிங்கமே போற்றி
ஓம் புண்ய லிங்கமே போற்றி
ஓம் புராண லிங்கமே போற்றி
ஓம் புவன லிங்கமே போற்றி
ஓம் பூதேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் புண்டரீகேச லிங்கமே போற்றி
ஓம் பூத லிங்கமே போற்றி
ஓம் பூதேச லிங்கமே போற்றி
ஓம் பூரேச லிங்கமே போற்றி
ஓம் பூர்ண லிங்கமே போற்றி
ஓம் பூஷ்டிதாயக லிங்கமே போற்றி
ஓம் பூஜ்ய லிங்கமே போற்றி
ஓம் பூஜாப்ரிய லிங்கமே போற்றி
ஓம் பௌருஷ லிங்கமே போற்றி
ஓம் போகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் மங்கள லிங்கமே போற்றி
ஓம் மரகத லிங்கமே போற்றி
ஓம் மஹா லிங்கமே போற்றி
ஓம் மகாகாள லிங்கமே போற்றி
ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் மங்களேசுவர லிங்கமே போற்றி
ஓம் மஞ்சுநாத லிங்கமே போற்றி
ஓம் மல்லிகார்ஜீன லிங்கமே போற்றி
ஓம் மத்தியார்ஜுன லிங்கமே போற்றி
ஓம் மார்க்கபந்து லிங்கமே போற்றி
ஓம் மார்க்கண்டேய லிங்கமே போற்றி
ஓம் மானஸ லிங்கமே போற்றி
ஓம் மானுஷ லிங்கமே போற்றி
ஓம் ம்ருண்மய லிங்கமே போற்றி
ஓம் ம்ருத்யுஞ்சய லிங்கமே போற்றி
ஓம் மூல லிங்கமே போற்றி
ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி
ஓம் மூர்த்திசாதாக்கிய லிங்கமே போற்றி
ஓம் மேரு லிங்கமே போற்றி
ஓம் மோன லிங்கமே போற்றி
ஓம் மோக்ஷ லிங்கமே போற்றி
ஓம் யக்ஞ லிங்கமே போற்றி
ஓம் யாம்ய லிங்கமே போற்றி
ஓம் யோக லிங்கமே போற்றி
ஓம் யோகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் ரஸ லிங்கமே போற்றி
ஓம் ரஜத லிங்கமே போற்றி
ஓம் ராம லிங்கமே போற்றி
ஓம் ராஜ லிங்கமே போற்றி
ஓம் ராமேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் ருஷ்யஸ்ருங்க லிங்கமே போற்றி
ஓம் ருணமோசன லிங்கமே போற்றி
ஓம் ருத்ரப்ரிய லிங்கமே போற்றி
ஓம் ருத்ராக்ஷப்ரிய லிங்கமே போற்றி
ஓம் ரௌத்ர லிங்கமே போற்றி
ஓம் லகுப்ரிய லிங்கமே போற்றி
ஓம் லினேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் லோகஜ லிங்கமே போற்றி
ஓம் லோகரக்ஷக லிங்கமே போற்றி
ஓம் வஜ்ர லிங்கமே போற்றி
ஓம் வரப்ரதாயக லிங்கமே போற்றி
ஓம் வாயு லிங்கமே போற்றி
ஓம் வான்மிக லிங்கமே போற்றி
ஓம் வந்தித லிங்கமே போற்றி
ஓம் வர்த்தமான லிங்கமே போற்றி
ஓம் வியாபி லிங்கமே போற்றி
ஓம் வியக்தாவியக்த லிங்கமே போற்றி
ஓம் விஸ்வரூப லிங்கமே போற்றி
ஓம் விஷ்ணுப்ரிய லிங்கமே போற்றி
ஓம் விஸ்வப்ரிய லிங்கமே போற்றி
ஓம் வில்வப்ரிய லிங்கமே போற்றி
ஓம் விபூதி லிங்கமே போற்றி
ஓம் விசித்ர லிங்கமே போற்றி
ஓம் வீர்ய லிங்கமே போற்றி
ஓம் விஸ்வ லிங்கமே போற்றி
ஓம் விமலேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் வீரேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் விருத்திகிரீச லிங்கமே போற்றி
ஓம் வியாக்ரேசுவர லிங்கமே போற்றி
ஓம் வியாளேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் வைஷ்ணவ லிங்கமே போற்றி
ஓம் வைத்தியநாதேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் வேத லிங்கமே போற்றி
ஓம் ஹிரண்ய லிங்கமே போற்றி
ஓம் ஹ்ருதய லிங்கமே போற்றி
ஓம் ஹிரண்யகர்பேச லிங்கமே போற்றி
ஓம் ஞான லிங்கமே போற்றி
ஓம் ஞானதாயக லிங்கமே போற்றி
ஓம் லிங்கோத்பவ லிங்கமே போற்றி

Friday 6 February 2015

சங்கட ஹர சதுர்த்தி - 07.02.2015

 சங்கட ஹர சதுர்த்தி
விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு."ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

வரலாறு

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் நடனமாடும் போது அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.

அப்போது விநாயகர் சந்திரனிடம், "இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்" எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

விரதத்தின் பலன்கள்

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் உண்டாகும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும் என்றும் நம்பப்படுகிறது.

 

நம்முடன் விநாயகர்

விநாயகர் சதுர்த்தியான இன்று நீங்கள் விநாயகர் முன் அமர்ந்து சொல்ல வேண்டியது இதுவே. இந்த பிரார்த்தனையை சதுர்த்தியன்று மட்டுமின்றி, தினமும் காலையில் நீராடியவுடன் விநாயகர் முன் அமர்ந்து சொன்னால் எந்த தோஷமும் தொலைந்து போகும். உயர்ந்த புகழ் ஏற்படும். நல்ல குழந்தைகள் அமைவார்கள். எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும்.


*கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவா வரம் தர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாளகுணமுள்ளவனே! கஜாமுகாசுரனை வென்றவனே! கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம்.


*இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே! பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தை தருபவனே! எல்லையில்லாத பரம்பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து அருளை வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.


*உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட குணமாகக் கொள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாகரனே! சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.


*திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து வை. தூய்மையான மனதைக் கொடு. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றி பெற துணை நிற்பவனே! கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை வைத்து வணங்குகிறேன். எம்பெருமானே! நீ வாழ்க, வாழ்க!


*பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை உடையவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் மைந்தனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! கஷ்டங்களை நீக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானை முக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து, வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகனே! சரணம்..சரணம்...சரணம்.


விநாயகர் விரதங்கள்:
வெள்ளிக்கிழமை விரதம்: வைகாசி வளர்பிறை வெள்ளிக்கிழமை துவங்கி, தொடர்ந்து 52 வெள்ளிக்கிழமைகளில் அனுஷ்டிக்கும் விரதம் (பெண்கள் வசதியில்லாத நாட்களை பின்வரும் வாரங்களில் கூட்டிக்கொள்ளலாம்). இந்த விரதத்தால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.


செவ்வாய்விரதம்: தை அல்லது ஆடி முதல் செவ்வாய் தொடங்கி, 52 வாரங்கள் அனுஷ்டிக்கும் விரதம் (பெண்கள் வசதியில்லாத நாட்களை பின்வரும் வாரங்களில் கூட்டிக்கொள்ளலாம்). இந்த விரதத்தால் செல்வ வளம் பெருகும்.


சதுர்த்தி விரதம்: ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் துவங்கி (இன்று), அடுத்த ஆண்டு புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி வரை தொடர்ந்து அனுஷ்டிப்பது. இந்த விரதத்தால் செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.


பிள்ளையார் நோன்பு (குமார சஷ்டி விரதம்):
கார்த்திகை தேய்பிறை பிரதமை திதி முதல், மார்கழி வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பது. இந்த விரதத்தால் தைரியம் அதிகரிக்கும்.


சங்கடஹரசதுர்த்தி: மாசி தேய்பிறை சதுர்த்தி துவங்கி, ஒரு ஆண்டு ஒவ்வொரு மாத தேய்பிறை சதுர்த்தியிலும் அனுஷ்டிப்பது. இந்த விரதத்தால் எப்படிப்பட்ட துன்பமும் விலகி விடும்.


தைவெள்ளி விரதம்: விநாயகரைக் குறித்து தை மாத வெள்ளிக்கிழமைகளில் செல்வ விருத்திக்காக பெண்கள் மட்டும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.


விநாயகர் நவராத்திரி: விநாயகர் சதுர்த்தியன்று துவங்கி தொடர்ந்து 9 நாள் இரவு 8 மணிக்கு திருவிளக்கு ஏற்றி, விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வணங்க வேண்டும். கன்னிப்பெண்களுக்கு சிறந்த வரன் அமைய ஏற்ற விரதம்.


விக்னம் களையும் விநாயகர்: எந்த செயலையும் நாம் செய்ய ஆரம்பிக்கும் முன் விநாயகரை வணங்கி அவருடைய அருளை வேண்டுகிறோம். கணபதியே ஓங்கார ஸ்வரூபி. அவர் விக்னங்களை அகற்றுபவர். குழந்தை முதல் முதியோர் வரை அவரை வணங்கி எல்லா இடையூறுகளையும் களைய பிரார்த்திக்கின்றனர். அவர் மோட்சத்திற்கு வழிவகுப்பவர். அவரை எந்த உருவத்திலும் வழிபடலாம். மஞ்சள் பொடியில் பிடித்து வைத்தாலும், களிமண்ணில் செய்தாலும், மரத்தில் செய்தாலும் அந்த உருவத்தில் பிரத்யட்சமாக நமக்கு அருள்பாலிப்பார்.


லலிதா ஸஹஸ்ர நாமத்தில் "மஹாகணேச நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா' என்ற நாமா வருகிறது. அதாவது, தேவி பண்டாசுரனை வதம் செய்யும்போது விநாயகர் பெரும் உதவி செய்தார் என்பது இதன் பொருள். தனது (விநாயக) யந்திரத்தினால் அசுரனும், அவனுடைய சகாக்களும் விடுத்த அத்தனை பாணங்களையும் வீழ்த்தி தேவியை வெற்றிபெறச் செய்தார். இதனால் தேவி மகிழ்ச்சி அடைந்தாள். விநாயகர் எப்போதும் தடைகளைப் போக்கி நம்மை காக்கிறார். வியாச முனிவர் சொல்ல அவர் மகாபாரதத்தை எழுதினார். தர்மத்தின் சாராம்சம் அனைத்தும் அடங்கியுள்ள இதிகாசம் மகாபாரதம். விநாயகரை, நாள்தோறும் வணங்கினாலும் பரீட்சை எழுதும் முன் கட்டாய மாகக் குழந்தைகள் அவரை பிரார்த்திக்க வேண்டும். வித்தையை அளிப்பவர் வித்யா கணபதி.

காதலை நிறைவேற்றிய கணபதி: விநாயகர் தன் தம்பி முருகப்பெருமானின் காதலை நிறைவேற்றி திருமணத்தை நடத்தி வைத்தவர். திருமாலின் கண்மலரில் தோன்றிய சுந்தரவல்லி சரவணப் பொய்கையில் நீராடி முருகனையே தன் கணவனாக அடைய வேண்டும் என்று தவம் செய்து வந்தாள். நீ வள்ளிமலையில் பிறந்து என்னை வந்து அடைவாய் என்று அருள்புரிந்தார் முருகன். வள்ளிமலையில் பிறந்து வளர்ந்த வள்ளி மீது முருகன் காதல் கொண்டு விளையாடல் புரிந்தார். வேடன், கிழவன் என பல வடிவத்தில் வந்து இறுதியில் தன் அண்ணன் விநாயகரை யானையாக வரும்படி அழைத்தார். விநாயகர் யானையாக வந்தார். யானையைக் கண்டு அஞ்சிய வள்ளிநாயகி முருகனைத் தஞ்சம் அடைந்தாள். முருகன் வள்ளியை மணந்து அருள்பாலித்தார். ""அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே'' என்று இந்நிகழ்வினை திருப்புகழில் தெளிவுபடுத்தி இருக்கிறார் அருணகிரிநாதர்.



குழந்தைகளின் கல்வி வளர...: குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முன்பு, விநாயகப்பெருமான் முன்னால் நின்று இந்த எளிய ஸ்லோகத்தை சொன்னால் விநாயகர் மிகச்சிறந்த கல்வி நலனைத் தருவார்.



""மூஷிக வாஹன மோதகஹஸ்த

சாமரகர்ண விளம்பித சூத்ர


வாமனரூப மஹேஸ்வர புத்ர


விக்ன விநாயக பாத நமஸ்தே!!''



இதை மிக எளிதாக மனப்பாடம் செய்து விடலாம்.


பொருள்: விநாயகப்பெருமானே! மூஞ்சூறை வாகனமாகக் கொண்டவரே! மோதகத்தை விரும்பி உண்பவரே! நீண்ட தும்பிக்கையை உடையவரே! அகன்ற காதுகளைக் கொண்டவரே! குள்ள வடிவமானவரே! சிவனின் மைந்தரே! தடைகளைத் தகர்ப்பவரே! உங்கள் திருப்பாதத்தை வணங்குகிறேன்.


அவ்வை பாடிய அகவல் : விநாயகருக்குரிய துதிப்பாடல்களில் விநாயகர் அகவல் மிகவும் பிரசித்தமானது. அவ்வையார் பாடிய இந்நூல் எழுந்த வரலாறு சுவையானது. அறிவின் வடிவாக விளங்கிய ஞான மூதாட்டி அவ்வையார். இவர் நாளும் விநாயகரை வழிபாடு செய்யும் இயல்புடையவர். ஒருநாள் சுந்தரர் யானை மீதும், சேரமான்பெருமாள் நாயனார் குதிரை மீது கயிலைக்குச் செல்வதை அறிந்தார். அவர்களுடன் தானும் கயிலை விரைவாகச் செல்ல எண்ணி வேகமாக விநாயகருக்கு பூஜை செய்தார். விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "அமைதியாகப் பூஜை செய்வாயாக; அவர்களுக்கு முன்பாக கயிலைப்பதியை அடையச் செய்கிறேன்' என்று அருள்புரிந்தார். விநாயகரின் அருள்மொழி கேட்ட அவ்வையார் அவர் மீது பாடிய பாடலே விநாயகர் அகவல் என்பதாகும். உள்ளம் உருகி, கண்ணீர் பெருகி பரவசத்துடன் நின்ற அவ்வையாரை ஒரு நொடிப் பொழுதினில் தன் துதிக்கையால் கொண்டு சேர்த்தார். நாமும் விநாயகர் அகவல் பாடி ஐங்கரனின் அருள் பெறலாம்.


விநாயகருக்கு படைக்க வேண்டியவை
மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.


கரும்பு: இனித்தாலும் கடிப்பதற்கு கடினமானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது. அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


திருநீற்று தொட்டி விநாயகர் : மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளத்தின் அருகே வீற்றிருக்கும் விபூதி விநாயகரை, திருநீற்றுப்பிள்ளையார் என்று அழைப்பர். மந்திரமாவது நீறு என்று திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருநீற்றின் பெருமையைப் பாடுகிறார். இவ்விநாயகருக்கு என்று அர்ச்சகர்கள் கிடையாது. பொற்றாமரைக்குளத்தில் கை, கால் தூய்மை செய்து, நாமே இவருக்கு நம் கையாலேயே திருநீற்றினை அபிஷேகம் செய்யலாம். தொட்டியில் வீற்றிருக்கும் இவ்விநாயகரின் மீது திருநீற்றினை இட்டு, அவரது பாதம் பணிந்து பூஜிப்பவர்களின் வினைகளைப் போக்கி அருள்கிறார்.


எலியின் மீது யானை: யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய பிராணியின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும் பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம். இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிற்றைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.

 நாம் வணங்கும் கடவுள்களிலேயே மிக செல்லமாக போற்றக் கூடியவர் விநாயகர்தான். வித்தியாசமான அவரது உருவத்தை பல்வேறு வடிவங்களில் உருவாக்கி, அவற்றை ஆன்லைனில் ஆராதனை செய்யவும், அனிமேஷன்களில் தவழவிட்டும் இன்டர்நெட்டில் அழகு பார்க்கின்றனர் ஏராளமான பக்தர்கள். இன்டர்நெட் வசதி உள்ளவர்கள், வீட்டிலிருந்த படியே இ-கணேஷை தரிசிக்க நல்ல வாய்ப்புள்ளது. யூ-டியூப் தளத்தில் விநாயகரின் கார்ட்டூன் கதைகள், வீடியோ பஜன்கள், தமிழ் துதிகள், விநாயகர் இதிகாசங்கள், வியாசரின் கதைகள், வேத மந்திரங்கள், விநாயகரின் பிறப்பு, சதுர்த்திக்கு உருவாகும் பொம்மை விநாயகர், குழந்தைகளுக்கான கதைகள், புதிர்கள், விநாயகர் துதி உள்ளிட்ட ஏராளமான வீடியோ தகவல்கள் இடம்பெற்றுள்ளன

 
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God




Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪