Friday 20 January 2012

DAILY CALENDARS 21st JAN. TO 27th JAN.



ஓம் ஆஞ்சநேய சுவாமியே போற்றி
ஓம் அஞ்சனா புத்திரா போற்றி
ஓம் ஆதித்தன் பிரியனே போற்றி
ஓம் அலங்கார வீரனே போற்றி
ஓம் கிஷ்கிந்தை வாழ்ந்தனை போற்றி
ஓம் பீமசேன ன் அண்ணனே போற்றி
ஓம் பாப விமோசனா போற்றி
ஓம் ஸ்ரீ ராம தூதனே போற்றி
ஓம் லங்காதகன தீரனே போற்றி
ஓம் சஞ்சீவிமலை கொணர்ந்தாய் போற்றி
ஓம் சுந்தரகாண்ட நாயகா போற்றி
ஓம் சீதா துயர் துடைத்தாய் போற்றி
ஓம் சீதக்களபம் அணிந்தாய் போற்றி
ஓம் சிவபிரியா போற்றி
ஓம் நவ வியாகரண மாகபண்டிதா போற்றி
ஓம் யோக நரசிம்ம பக்தனே போற்றி
ஓம் சாம்பவந்தர் அன்பனே போற்றி
ஓம் சாஸ்திரம் கற்றாய் போற்றி
ஓம் துர்க்கையின் இனியனே போற்றி
ஓம் தூயவாழ்வளிப்பாய் போற்றி
ஓம் பிரம் ரிஷியே போற்றி
சர்வ ரோகம் தீர்ப்பாய் போற்றி
ஓம் அங்கார தாரை துதிப்பாய் போற்றி
ஓம் லங்கனி பணிந்தாய் போற்றி
ஓம் விபீஷணன் உயிரோய் போற்றி
ஓம் பாரிஜாத தருதந்தாய் போற்றி
ஓம் வாயுபுத்ரா போற்றி
ஓம் வசந்தகால நாயகா போற்றி
ஓம் கந்தர்வ வித்யாகாரகா போற்றி
ஓம் அங்கதன் நண்பனே போற்றி
ஓம் தார்ரையே காத்தோய் போற்றி
ஓம் திரிசடை பகழ்ந்தாய் போற்றி
ஓம் தீவினை அழிப்போய் போற்றி
ஓம் மங்களம் தருவாய் போற்றி
ஓம் மாருதி திருத்தாள் போற்றி
ஓம் வெற்றியின் மைந்தா போற்றி
ஓம் சக்தியின் பிள்ளாய் போற்றி
ஓம் கணையாழி தந்தாய் போற்றி
ஓம் சூடாமணி கண்டாய் போற்றி
ஓம் மதுவனம் திரிந்தாய் போற்றி
ஓம் நிகும்பலை அழித்தாய் போற்றி
ஓம் மைநாகம் பார்த்தோய் போற்றி
ஓம் அணுவென புகுந்தாய் போற்றி
ஓம் ஆசையை வென்றாய் போற்றி
ஓம் கடிகையில் அமர்ந்தோய் போற்றி
ஓம் கங்கையில் நடந்தோய் போற்றி
ஓம் சங்கரன் அருளா போற்றி
ஓம் சாமுண்டி பிரியா போற்றி
ஓம் ராகுவை பிடித்தாய் போற்றி
ஓம் கேதுவே அடித்தாய் போற்றி
ஓம் மகாபல பராக்கிரம வீரா போற்றி
ஓம் கடல்தனை கடந்தாய் போற்றி
ஓம் வைதேகி புகழ்ந்தாய் போற்றி
ஓம் வஜ்ரதோள் உடையோய் போற்றி
ஓம் ராம்பக்த ஹனுமானே போற்றி
ஓம் நவசக்தி அருள்பாலா போற்றி
ஓம் சிரஞ்சீவி போற்றி
ஓம் பிரபுவே போற்றி
ஓம் பலசித்தி பெற்றாய் போற்றி
ஓம் கவி சேனாபதியே போற்றி
ஓம் ரத்னகுண்டல பதயே போற்றி
ஓம் சஞ்சலம் தீர்க்கும் சுவாமியே போற்றி
ஓம் யோக ஆஞ்சனேயா போற்றி
ஓம் மாதங்க வனப்பிரியனே போற்றி
ஓம் அஞ்சனா கர்ப ஹனுமந்தா போற்றி
ஓம் சீதா சோகநிவாரணா போற்றி
ஓம் தசக்கிரிவ கர்வம் அழித்தாய் போற்றி
ஓம் வஜ்ரகாயா போற்றி
ஓம் மஹாத்மா போற்றி
ஓம் ராம்பக்தாயா போற்றி
ஓம் மக்சகந்தி பிரியா போற்றி
ஓம் மருதமரவாசா போற்றி
ஓம் கந்த மதன பர்வதா போற்றி
ஓம் கோதாவரி தீரனே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் வீரனே போற்றி
ஓம் ராமனின் தூதா போற்றி
ஓம் சீதா சமேதராம்பாத சேவகா போற்றி போற்றி போற்றி


\
தை அமாவாசைஇந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம்வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு,கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூசை செய்வர்.
கடல்கூடும் கன்னியாகுமரி, இராமேசுவரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும்.
இராமேசுவரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ராமநாத சுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு இராமேசுவரம்வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். இராமேசுவரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீ நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் காணும் இடமெல்லாம் தீபங்களாக - பிரகாச ஜோதியாகவே காணப்படும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.[1]
அமாவாசையை முழு நிலவு ஆக்கிய அன்னை அபிராமியின் பக்தனுக்கு அருளும் மாண்பினை விளக்கும் காட்சி யொன்று எல்லா ஆலயங்களிலும் , திருக்கடவூர் அன்னை அபிராமியின் திரு முன்னும் நடப்பது வழக்கம்


தை திருவோன   வழிபாடு  தலைமலை திருத்தல வரலாறு

http://www.thalaimalai.com/tamil/history.html



முருகன் வழிபாடு :
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=455


தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி.  கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும்.  இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்.
Also see:
http://temple.dinamalar.com/New.php?id=1240



வாஸ்து காயத்ரி
ஒம் வாஸ்து புருஷாய வித்மஹே
யோக மூர்த்தியாய தீமஹி
தந்நோ வாஸ்து ப்ரசோதயாத்.
௨) ஒம் பிருத்வீ மூல தேவாய வித்மஹே
பூலோக நாதாய தீமஹி
தந்நோ வாஸ்து ப்ரசோதயாத்.
பொருள்: பூமியை மூலமாக கொண்டு தேவர்களின் இருப்பிடமாகவும் விளங்குபவனும்,பூவுலகின் நாதனாக தோன்றுபவனுமான ஸ்ரீவாஸ்து புருஷன் நம்மை காப்பாற்றுவாராக.
௩)ஒம் அநுக்ரஹ ரூபாய வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து ப்ரசோதயாத்.
பொருள்: இல்லத்தில் வாழ்பவருககு சகல ஐஸ்வரியங்களையும் அருள்பவனும்,பூமித்தாயின் புத்திரனாக விளங்குபவனுமான வாஸ்து புருஷனை வணங்குகிறேன். அவர் நம்மை நல் வழியில் அழைத்து செல்வார்.
௪)மான தண்டம் கராப்ஜீயேன
வஹந்த பூமி ஸீதகம்
வந்தே ஹம் வாஸ்து புருஷம்
ததாநம் ஸ்ரியம் மே ஸுகம்.
பொருள்: பூமியின் அளவுகோலை கையில் வைத்திருப்பவரும் எனது வீட்டு
ஐஸ்வரியத்தின் அளவு கோலாக திகழ்பவுனுமான பூமிபுத்திரனாம் வாஸ்து
தேவனை வணங்குகிறேன். அவன் எனக்கு நிரந்தர ஐஸ்வரியத்தையும்
சுகத்தையும் அளிப்பாராக.


தை வெள்ளி அம்மன் வழிபாடு- தமிழ்

http://temple.dinamalar.com/Slogandetails.php?id=453



தை வெள்ளிக் கிழமை நாள்களில் இந்த மிக மிக எளிமையான மஞ்சள் பொங்கல் செய்வார்கள். வடை பாயசம் என்று விஸ்தாரமாக சமைக்க முடியாத பண்டிகை நாள்களில் கூட இதை மட்டும் செய்தால் போதும், மங்களகரமானது என்பதால், ‘கல்யாணப் பொங்கல்’ என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு. சிலர் குடும்பங்களில் பெண்கள் வயதுக்கு வந்ததும் முதல் உணவாக தாய்மாமன் பெயரைச் சொல்லி அந்தப் பெண்ணுக்கு இந்தப் பொங்கலை செய்துகொடுப்பார்கள் என்பதால் ‘அம்மான் பொங்கல்’ என்றும் பெயர்.
தேவையான பொருள்கள்:
அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணை/நெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -  தேவையான அளவு
 
செய்முறை:
  • அரிசி பருப்பைக் கழுவிக் களைந்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 பங்கு தண்ணீர் வைத்துக் குழைய வேக விடவும்.
  • தேங்காய் எண்ணை அல்லது நெய் கலந்து பரிமாறலாம்.
* இந்தக் குறிப்பைப் படிக்கும்போது, சாதரண சாத்ததில் நெய், பருப்பு சேர்த்து சாப்பிடுவதற்கும் இதற்கும் என்ன் வித்தியாசம் என்று நினைக்கலாம். நானும் நினைத்திருக்கிறேன். சுவை அளவில் பெரும் வித்தியாசம் இருப்பது செய்து பார்த்தால் தான் தெரியும்.
* நெய் கலந்து குழைந்த பொங்கல் சுவையாக இருக்கும். ஆனால் அதைவிட தேங்காய் எண்ணை சேர்த்த உதிரியான பொங்கல் மிகுந்த சுவையாக இருக்கும்.  பொங்கல் உதிரியாக இருந்தாலும் நன்றாக மென்மையாக வெந்திருக்க வேண்டும்.


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment